எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள், இனி சிறு ஏடிஎம்களாகவும் செயல்படவிருக்கின்றன. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டுவந்தாலும், இதற்கான நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை கொண்டுவருவதில் இருந்த சவால் அதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில், மக்களுக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொடுக்கும் சிறு ஏடிஎம்கள் போல செயல்படுவதற்கான முன்முயற்சிகளை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளை அணுக முடியாமல் இருக்கும் பாமர மக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுக்க பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவியானது, கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நிறுவப்பட்டு, அதற்கென ஒரு வங்கி ஊழியர் பணியமர்த்தப்படுவார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் மின்னணு பாயின்ட்-ஆஃப்-சேல் இயந்திரங்களை வங்கிகளின் இணைய தளங்களுடன் இணைப்பதில் உள்ள சவால்கள் காரணமாக அது அப்போது நடைமுறைக்கு வராமல் போனது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் கூறியதாவது: ஏடிஎம்களாக மாற்றக்கூடிய வசதி இருக்கும் நியாயவிலைக் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன என்றார். மேலும், சில நியாயவிலைக் கடைகளை மாற்றுவதற்கான கூடுதல் வழிமுறைகளும் ஆராயப்படவிருக்கிறது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.
பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிசிஎஸ்) இதேபோன்ற சேவைகளை வழங்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டதையும் சுப்பையன் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள 4,500 பிஏசிசிஎஸ் அமைப்புகளில், கிட்டத்தட்ட 3,500 மைக்ரோ ஏடிஎம்களாக செயல்படுகின்றன" என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மூலம் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம். டெபிட் கார்டுகள் இல்லாத, சமூக ஓய்வூதியத் தொகையை பெறும் முதியவர்களுக்கு தற்போது, வங்கி ஊழியர்கள் மூலம்தான் பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழகத்தில் சுமார் 35 லட்சம் முதியவர்கள், முதியவர்களுக்கான ஓய்வூதியமான ஆயிரம் ரூபாயை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2.7 லட்சம் பயனர்கள், வங்கிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது அஞ்சலகங்கள் வாயிலாகவோ தான் தங்களது பணத்தைப் பெற்று வருகிறார்கள், இவர்களால் ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில், மலைப்பகுதிகளில், இன்டர்நெட் வசதி குறைந்த பகுதிகளில், மக்களின் கைரேகைகளைப் பதிவு செய்து பணம் வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் முதியவர்கள் பல முறை வங்கிகளுக்கு அலையும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில்தான், ஏற்கனவே நியாயவிலைக் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத் தொகைகள் மிக எளிதாக மக்களுக்கு சென்றடைந்ததை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு இந்த புதிய திட்டம் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகையாக முதன் முதலில் ரேஷன் கடைகளில் ரூ.100 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு ரூ.1000, பிறகு அதுவே ரூ.2500 வரை வழங்கப்பட்டது. கடைசியாக வெள்ள நிவாரண நிதியாக ரூ.6000 வரை ரேஷன் கடைகளிலேயே மிக எளிதாக ரோக்கன்கள் விநியோகம் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2024.
30 Sep 2024 -
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்பிடித்தார் ஜுக்கர்பெர்க் : முதலிடத்தில் எலான்மஸ்க்
30 Sep 2024நியூயார்க் : உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
நவம்பரில் வெளியாகும் கிளாடியேட்டர்-2
30 Sep 2024வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ .
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு
30 Sep 2024டோக்கியோ : இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
லெபனானில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 105 பேர் பலி
30 Sep 2024பெய்ரூட் : லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
-
காவிரிப் பிரச்சினையில் அரசியல் கலக்காதீர்கள்: மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கருத்து
30 Sep 2024திருச்சி, காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு
30 Sep 2024திருப்பதி : கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
30 Sep 2024புதுடெல்லி : பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு உத்தரவு
30 Sep 2024கொழும்பு : கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
ரத்ததான மையங்களை கண்காணிக்க வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
30 Sep 2024சென்னை, இரத்த தான மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது என்று ரத்ததான தின செய்தியில் முதல்வர் மு.க.
-
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்: டிரம்ப்
30 Sep 2024வாஷிங்டன் : ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
ரபேல் கொள்முதல் குறித்து பேச்சு: பிரான்ஸ் சென்றார் அஜித் தோவல்
30 Sep 2024புது டெல்லி, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். &nb
-
பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
30 Sep 2024புது டெல்லி, பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
30 Sep 2024ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
பிரதமர் மோடி குறித்த கருத்து வெறுக்கத்தக்கது : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பா.ஜ.க.
-
பாராட்டு மழையில் லப்பர் பந்து படக்குழு
30 Sep 2024பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் லப்பர் பந்து.
-
என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி வேண்டுகோள்
30 Sep 2024சென்னை, என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
-
த.வெ.க. கொடியில் யானை: பகுஜன் கட்சி புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
30 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கனஅடியாக அதிகரிப்பு
30 Sep 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,284 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
சட்டம் என் கையில் விமர்சனம்
30 Sep 2024இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில்.
-
மெய்யழகன் விமர்சனம்
30 Sep 202496 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரேம் குமார்.
-
தீவிரவாதத்திற்கு எதிராக எல்லைகளின் மறுபக்கத்திற்கும் சென்று தாக்குதல் நடத்துவோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
30 Sep 2024ஸ்ரீநகர், பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.
-
திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : திருப்பதி பிரசாத லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண