எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை குடித்ததால், விழுப்புரம் அருகே ஒருவர் உயிரிழந்தார் என்றும், இந்த உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை எனவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன என்று எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 65), என்பவர் சாராயம் அருந்தி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 30.06.2024 அன்று மதியம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், இருவேல்பட்டு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 29.06.2024 அன்று இரவு புதுச்சேரி மடுகரை அரசு சாராயக்கடையில் முருகன் என்பவர் 5 பாக்கெட்டுகள் சாராயம் வாங்கி 2 பாக்கெட்டுகளை தானே குடித்துவிட்டு ஜெயராமன் என்பவருக்கு இரண்டு பாக்கெட்டுகளையும், சிவசந்திரன் என்பவருக்கு ஒரு பாக்கெட்டையும் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களில், ஜெயராமன் என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மேற்படி முருகன் என்பவர் புதுச்சேரி, மடுகரை அரசு சாராயக்கடை எண்.1-ல் சாராயப் பாக்கெட்டுகளை வாங்கியது உண்மை என்று தெரியவந்துள்ளது. முருகன் மற்றும் சிவசந்திரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் 30.06.2024 அன்று இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து மூவரின் ரத்த மாதிரிகளையும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அவர்கள் அருந்தியது எத்தனால் (Ethanol) என்றும், மெத்தனால் எதுவும் இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் மேற்படி இருவரும் நல்ல நிலையில் 3.7.2024 அன்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெயராமன் என்பவர் அதிக அளவு மதுப்பழக்கம் உள்ளவர் என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜூலை 4) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி வந்த முருகன் என்பவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதான் நடந்தது. ஆனால் இதனை சரிபார்க்காமல், இச்சம்பவத்தை கள்ளச் சாரய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சாராயக் கடத்தலைத் தடுப்பதற்கு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் ரோந்துப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் காவல் துறையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை என்று உறுதியாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 days ago |
-
தமிழகத்தில் விஷக்காய்ச்சல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் அதிகரித்து வரும் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமலும் வேடிக்கை பார்ப்பதாக, தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்
-
தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை : அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
04 Oct 2024கோவை : தமிழகத்தில் எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்கள்
04 Oct 2024ஏமன் : பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
நீர்வளத்துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
04 Oct 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரம
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2024.
04 Oct 2024 -
லெபனானுக்கு முழு ஆதரவு: கத்தார் அறிவிப்பால் பதற்றம்
04 Oct 2024தோகா : லெபனானுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கத்தார் அறிவித்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
-
வீடு திரும்பினார் ரஜினி
04 Oct 2024சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
-
கூகுளின் ஏ.ஐ. செயலி விரைவில் 8 இந்திய மொழிகளில் அறிமுகம் : கூகுள் நிறுவன இந்திய சி.இ.ஓ. தகவல்
04 Oct 2024புதுடில்லி : கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது.
-
அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபரின் வருமானம் இரு மடங்காக உயரும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
04 Oct 2024புதுடெல்லி : வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
04 Oct 2024மும்பை : இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
-
காசாவின் மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
04 Oct 2024ரமல்லா : காசாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Oct 2024சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி
-
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேச்சு: பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்
04 Oct 2024மதுரை : துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேசியது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் திடீர் ரத்து
04 Oct 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன.
-
கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
04 Oct 2024சென்னை : கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
04 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு வேலை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
-
மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல்
04 Oct 2024மதுரை : மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
-
கலைத்துறை வித்தகர் விருது: பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
04 Oct 2024சென்னை : பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு பங்கு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
04 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்பது க
-
சுரங்க மெட்ரோ ரயில் சேவை: மும்பையில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
04 Oct 2024மும்பை : மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
04 Oct 2024சென்னை : சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் திடீர் சேதம்
04 Oct 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அங்கு கோவில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது பக்தர்களை கவலை அடையச்ச
-
கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மாநில அரசுகள் வழங்கும் உள் இடஒதுக்கீடு செல்லும் : மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி
04 Oct 2024புதுடெல்லி : எஸ்.சி., எஸ்.டி.