எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது. இந்த வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரை பகுதியில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்த துணை புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி மற்றும் இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_______________________________________________________________________
பி.வி.சிந்து புதிய நம்பிக்கை
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து பேசி இருந்தார். அப்போது காணொளி அழைப்பு மூலம் பிரதமருடன் சிந்து பேசி இருந்தார். “ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இந்த சார்பில் நான் பங்கேற்கிறேன். 2016 ஒலிம்பிக்கில் நான் வெள்ளி வென்று இருந்தேன். 2020 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.
இந்த முறை ஒலிம்பிக்கில் நிறைய அனுபவத்துடன் கலந்து கொள்கிறேன். ஆனால், இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது. இருந்தாலும் எனது சிறந்த முயற்சியை நான் வெளிப்படுத்துவேன். இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் என வாழ்த்துகள். இதில் அழுத்தம் இருக்கும். உங்கள் கடின உழைப்பு இங்கு அழைத்து வந்துள்ளது. இதனை மற்றும் ஒரு விளையாட்டு தொடராக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். நூறு சதவீத திறனை வெளிப்படுத்தினால் போதுமானது” என பி.வி.சிந்து தெரிவித்தார்.
_______________________________________________________________________
அடுத்த சுற்றில் டாமி பால்
டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டாமி பால், கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பால் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிபெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, கனடா வீராங்கனை பியன்கா ஆண்ட்ரிஸ் உடன் மோதினார். இதில் பவுலினி 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
_______________________________________________________________________
சிக்கந்தர் குறித்து பெருமிதம்
இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் ஜிம்பாப்வே அணி, பேட்டர் சிகந்தர் ராஸா தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இம்மாதம் ஜிம்பாப்வே செல்லும் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடர், இன்று (6-ஆம் தேதி) தொடங்குகிறது. இதற்கான ஜிம்பாப்வே அணி, பல இளம் வீரர்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவமிக்க பேட்டரான சிகந்தர் ராஸா அதற்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார். எனினும் மூத்த வீரர்களான கிரெய்க் எர்வின், ஷான் வில்லியம்ஸ், ரையான் பர்ல் உள்ளிட்டோர் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளஎர் கூறியதாவது. ,சிக்கந்தர் ராஸா மாதிரியான ஒருவர் அணியை வழிநடத்துவதில் நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம். அவருக்கு டி20களில் அதிகமான அனுபவம் இருக்கிறது. அவர்தான் அணியை முன்னிறு நடத்தவேண்டுமென விரும்புகிறோம். ஓய்வறையில் வீரர்களுடன் பேசுவது அவர்களை எப்படி கையாள்வது என எல்லாம் சரியாக செய்கிறார். அவரது பேட்டும் பந்தும் மட்டுமே பேச வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம் என்றார்.
_______________________________________________________________________
ஹார்திக்கை பாராட்டிய ரோஹித்
டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, மும்பையில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பார்படோஸிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்திய அணியினர், 16 மணி நேர இடைநில்லா பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் மும்பை வந்தனர். ஊர்வலத்தின் நிறைவாக இரவில் வான்கடே மைதானத்தை அடைந்த இந்திய அணியினருக்கு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மைதானத்தில் உற்சாகப் பாடல் ஒலிக்க, இந்திய வீரர்களும் நடனமாடிக் கொண்டாடினர்.
இதில் பேசிய ரோஹித் சர்மா, “ஹார்திக் முக்கியமான அந்தக் கடைசி ஓவரை வீசினார். எவ்வளவு ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி அது மிகவும் அழுத்தமிக்க தருணம். அந்த ஓவரை ஹார்திக் சிறப்பாக வீசினார். அவருக்கு தலைவணங்குகிறேன்” என்றார். இதற்கு வான்கடே மைதானம் ஹார்திக் ஹார்திக் என கூச்சலிட்டது. ஹார்திக் நெகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மும்பை ரசிகர்கள் ஐபில் போது ஹார்திக்கை கிண்டல் செய்தனர். தற்போது பாராட்டுகிறார்கள். இது நெகிழ்ச்சியாக இருக்கிறதென கிர்க்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
_______________________________________________________________________
அரையிறுதியில் அர்ஜென்டினா
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா- ஈகுவடார் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டினேஸ் கோல் அடித்தார். கார்னர் வாய்ப்பில் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஈகுவடார் அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஸ்டாப்பேஜ் (காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்படும் கூடுதல் நேரம்) நேரத்தில் 91-வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சக வீரர் பாஸ் செய்த பந்தை கெவின் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினா முதலில் ஆரம்பிடித்தது. மெஸ்சி முதல் வாய்ப்பை பயன்படுத்தினார். பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது. இதனால் மெஸ்சி ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஈகுவடாரின் முதல் வாய்ப்பில் அந்நாட்டு வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார். இதனால் 0-0 என ஆனது. அதன்பின் அர்ஜென்டினா தொடர்ந்து 3 வாய்ப்புளிலும் கோல் அடித்தது. ஈகுவடார் 2-வது வாய்ப்பிலும் கோல் அடிக்காமல் தவறவிட்டது. 3-வது மற்றும் 4-வது முறை கோல் அடித்தது. இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி வாய்ப்பை அர்ஜென்டினா கோலாக மாற்றியது. இதனால் 4-2 என அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 days ago |
-
தமிழகத்தில் விஷக்காய்ச்சல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் அதிகரித்து வரும் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்தாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமலும் வேடிக்கை பார்ப்பதாக, தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்
-
தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை : அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
04 Oct 2024கோவை : தமிழகத்தில் எங்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்கள்
04 Oct 2024ஏமன் : பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதிக்களால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
நீர்வளத்துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
04 Oct 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் 83 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், புனரம
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2024.
04 Oct 2024 -
கூகுளின் ஏ.ஐ. செயலி விரைவில் 8 இந்திய மொழிகளில் அறிமுகம் : கூகுள் நிறுவன இந்திய சி.இ.ஓ. தகவல்
04 Oct 2024புதுடில்லி : கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது.
-
அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபரின் வருமானம் இரு மடங்காக உயரும் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
04 Oct 2024புதுடெல்லி : வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கைத் தரம் செங்குத்தான உயர்வை காணும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும
-
வீடு திரும்பினார் ரஜினி
04 Oct 2024சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
04 Oct 2024மும்பை : இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது.முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
-
லெபனானுக்கு முழு ஆதரவு: கத்தார் அறிவிப்பால் பதற்றம்
04 Oct 2024தோகா : லெபனானுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கத்தார் அறிவித்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Oct 2024சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி
-
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேச்சு: பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்
04 Oct 2024மதுரை : துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக பேசியது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் திடீர் ரத்து
04 Oct 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டன.
-
கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
04 Oct 2024சென்னை : கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
04 Oct 2024சென்னை : தமிழகத்தில் திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காசாவின் மேற்குக்கரை முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
04 Oct 2024ரமல்லா : காசாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
-
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு வேலை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி
04 Oct 2024சண்டிகர் : அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
04 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
கலைத்துறை வித்தகர் விருது: பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
04 Oct 2024சென்னை : பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு பங்கு குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
04 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்பது க
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
04 Oct 2024சென்னை : சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
-
சுரங்க மெட்ரோ ரயில் சேவை: மும்பையில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
04 Oct 2024மும்பை : மும்பையில் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 5) கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
-
மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல்
04 Oct 2024மதுரை : மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் திடீர் சேதம்
04 Oct 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அங்கு கோவில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளது பக்தர்களை கவலை அடையச்ச
-
கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மாநில அரசுகள் வழங்கும் உள் இடஒதுக்கீடு செல்லும் : மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி
04 Oct 2024புதுடெல்லி : எஸ்.சி., எஸ்.டி.