எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Bumra 2023 08 18](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/11/Bumra_2023_08_18.jpg?itok=qoaF4Cg1)
Source: provided
அனைத்து ஃபார்மெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இப்போது இருப்பது பும்ரா தான். புதிய பந்தை கொண்டு பந்து வீசும் போது வேகத்தை கூட்டி வீசுகிறார். போட்டிகளில் விளையாடும் போது அவரது செயல்திறன் மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன்கள் வெளிப்படுகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் கொடுக்காமல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவர் அபாரமான பவுலர். அதே போல இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது. விரைந்து ரன் சேர்க்கும் ஹிட்டர்களும் அணியில் உள்ளனர். இந்த பாராட்டுகளுக்கு எல்லாம் அவர்கள் பொருத்தமானவர்கள்” என பிரெட் லீ தெரிவித்திருந்தார்.
தற்போது உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியை பிரெட் லீ வழிநடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2013-ல் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஐசிசி தொடரில் பட்டம் வென்றுள்ளது. இந்தச் சூழலில் பும்ராவை பிரெட் லீ பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்றார். 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அதில் அவரது ஆவரேஜ் 8.26. எக்கானமி ரேட் 4.17.
பி.சி.பி.யில் புதிய சர்ச்சை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும், 2024 டி20 உலகக் கோப்பையின் போதும் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அணியின் பிற ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகமான ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "சமீபத்திய சுற்றுப்பயணங்களின்போது ஷாஹீன் ஷா அப்ரிடி பயிற்சியாளர்கள் கேரி கிர்ஸ்டன், அசார் மஹ்மூத் உள்ளிட்டோர்களிடம் மோசமாக நடந்துகொண்டார். அவருக்கு எதிராக பயிற்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், வீரர்களின் ஒழுங்கு மீறல்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திடம் பயிற்சியாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது.
இறுதிக்கு கொலம்பியா தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 2-0 கோல் கணக்கில் கனடாவை வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் உருகுவே அணியினால் ஒரு கோல்கூட அடிக்கமுடியவில்லை. கொலம்பிய அணி 39ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. பின்னர் 45’+1 நிமிடத்தில் கொலம்பிய வீரருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இறுதிவரை உருகுவே அணியினால் கோல் அடிக்க முடியாததால் கொலம்பிய அணி 1-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 15 முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவே அணி ஒரு கோல்கூட அடிக்காமல் அரையிறுதியில் தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பிய அணி ஒரேமுறை மட்டுமே கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. மாறாக ஆா்ஜென்டீனா 15 முறை கோப்பையை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டி ஜூலை 15 காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ருதுராஜின் ஜாலி பதிவு
ருதுராஜ் கெய்க்வாட் 2024 ஐபிஎல் முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுகிறார். தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டியில் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20யில் அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொப்பி வழங்கியுள்ளார்கள். அதில் இருக்கும் எண் 88. 8+8 = 16, 1+6=7. ஏழு என்பது டோனியின் எண்.
சமீக காலமாக 7 எண் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் தல ஃபார் ஏ ரீசன் (டோனிதான் காரணம்) என்ற ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு வருகிறது. 2024 ஐபிஎல்முதல் இந்த டிரெண்ட் தொடங்கப்பட்டது. உலகக் கோப்பையில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதும் குறுப்பிடத்தக்கது. இந்நிலையில் ருதுராஜ் தனது தொப்பியில் உள்ள எண்ணை 7 வரும்படி கணக்கிட்டு, “நான் டிரெண்டுக்கு முன்பாக இருக்கிறேன்” என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை 65![]() 1 day 7 min ago |
பிரட் உப்மா![]() 5 days 2 hours ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 1 week 1 day ago |
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி
01 Aug 2024காசா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
-
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடை ஏதுமில்லை: சுப்ரீம்கோர்ட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
01 Aug 2024புது டெல்லி, பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
-
இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம்: 3 பேர் பலி - 40 பேர் மாயம்
01 Aug 2024சிம்லா, இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படைகளுக்கு ஈரான் தலைவர் உத்தரவு
01 Aug 2024டெக்ரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படையினருக்கு ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2024.
01 Aug 2024 -
தேர்தல் முடிவு குறித்த விவகாரம்: வெனிசுலா அதிபரின் சவாலை ஏற்று கொண்ட எலான் மஸ்க்
01 Aug 2024நியூயார்க், வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவு விவகாரத்தில் வெனிசுலா அதிபரின் சவாலை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
01 Aug 2024டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட
-
கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் தெரிவித்த இனவெறி கருத்து பல்வேறு தரப்பினர் கண்டனம்
01 Aug 2024வாஷிங்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
ஜனாதிபதி தலைமையில் 2 நாள் மாநாடு: டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
01 Aug 2024சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் மாநில கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென
-
கேரள நிலச்சரிவு சம்பவம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய அதிபர் புடின்
01 Aug 2024மாஸ்கோ, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ச்சியாக பலர் பலியான சோக சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் செய
-
மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடா?: விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ்
01 Aug 2024பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
-
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி
01 Aug 2024சென்னை, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.
-
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள முதல்வர்
01 Aug 2024திருவனந்தபுரம், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை.
-
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
01 Aug 2024சேலம், மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு நேரடியாக ரூ. 300 தரிசன டிக்கெட் வழங்க பரிசீலனை
01 Aug 2024திருப்பதி, திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூ.
-
தீரன் சின்னமலை நினைவு நாள்: சென்னையில் திருவுருவப் படத்திற்கு நாளை முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Aug 2024சென்னை, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
-
ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சஸ்பெண்ட்
01 Aug 2024ராஞ்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஜார்கண்ட் முதல்வர் சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பா.ஜ.க.
-
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுல், பிரியங்கா ஆய்வு
01 Aug 2024வயநாடு, தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
-
தணிக்கையாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
01 Aug 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆ
-
சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு
01 Aug 2024சென்னை, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டு ரூ.1,817 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்
01 Aug 2024சென்னை, மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு
01 Aug 2024சென்னை, இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
01 Aug 2024சென்னை, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
01 Aug 2024சென்னை, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
01 Aug 2024புதுடெல்லி: லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.