முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்: கட்சியினர் மத்தியில் துரைமுருகன் பேச்சு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்      அரசியல்
Duraimurugan 2022 12 11

வேலூர், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

வேலூர் மாநகர பகுதி தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சரமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாம் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்தோம். ஆனாலும் இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளோம்.  அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும், 

 இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். இளைஞர்கள் வருகிறார்கள் இன்றைக்கு நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லாம் இளைஞர்களாக வந்தோம். அண்ணா சொன்னார் நாற்றங்காலில் இருக்கிற பயிரை பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டு விட்டால் பாழாகிவிடும். 

ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். ஆகவே சொல்கிறேன் இளைஞர்கள் வரவேண்டும். இளைஞர்கள் இல்லாமல் ஒரு காலம் கட்சியே போய்விடும். ஆகவே இளைஞர்களுக்கு வழி விடுங்கள். 

ஆனால் வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள். வந்த உடனேயே என்ன கிடைக்கும்னு எதிர்பார்க்காதீர்கள். உங்களை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஆகவே தான் இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும். 

இந்த நிலைமையை நாம் நினைத்தால் தான் ஒரு இயக்கத்தை நிலைத்து நிற்க வைக்க முடியும். நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா மிசாவில் எல்லோரும் நமது கட்சி போய்விடும் என நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு பார்த்தீர்களா. நம்முடைய தலைவர் அதைவிட அதிகமாக இன்று உழைக்கிறார். எம்.ஜி.ஆ.ருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நீ எதிர்க்கக் கூடாது என கருணாநிதி சொன்னார். இதனை நான் எம்.ஜி.ஆரிடம் சொன்ன போது அவர் கண்ணீர் விட்டு அழுது விட்டார். 

இருபெரும் தலைவர்களோடு மிக நெருக்கமாகவும், அண்ணாவோடும் பழகியிருக்கிறேன். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசியல் என்பது பொழுதுபோக்கு மடம் அல்ல, அரசியல் என்பது வியாபாரம் அல்ல, அரசியல் என்பது கொள்கை பிடிப்பு, கொள்கை நியாயம்.  இந்தக் கட்சியில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெருமைதான். இவ்வாறு அவர்  பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, 

 மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று எங்களுக்கு சொன்னவர் அண்ணா. அண்ணா முதல்வரானவுடன் 3 கொள்கைகளை அறிவித்தார். ஒன்று தமிழ்நாடு என பெயரிட்டார். 2-வது இரு மொழிக் கொள்கைதான். தமிழ், ஆங்கிலம். 3-வது கொள்கை சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். 3 கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்தார். 

இந்த கொள்கைகளையும் மாற்றுகிற சக்தி எந்த கொம்பனுக்கும் கிடையாது என அப்போதே சொன்னார். வேற்று மொழி வந்தால் தாய்மொழி அழியும் என்பது எங்களின் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். இவ்வாறு அவர்  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து