எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், கோயில்கள் சார்பில் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிறுவி அறப்பணிகளை மேற்கொள்ளுதல், சித்தர்களுக்கும், அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கும், மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கும் சீர்வரிசைகளை வழங்கி திருமணம் செய்து வைத்தல், மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரி பெருவிழாவினை பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்புற நடத்துதல் போன்ற பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
2022-2023 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, கோயில்கள் சார்பில் 500 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்திடும் வகையில் கடந்த 4.12.2022 அன்று தமிழக முதல்வர் 25 ஜோடிகளுக்கு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் 600 ஜோடிகளுக்கு திருமண விழா நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக தமிழக முதல்வர் 7.07.2023 அன்று 34 ஜோடிகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
இந்த அரசு பொறுப்பேற்றபின், 2022–2023 ஆம் நிதியாண்டில் 500 ஜோடிகளுக்கும், 2023 – 2024 ஆம் நிதியாண்டில் 600 ஜோடிகளுக்கும், என மொத்தம் 1,100 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் “பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றையதினம் (அக்.21) திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை உட்பட மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் மொத்தம் 379 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஜோடிகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
தமிழகத்திற்கு அதிக மழை பாதிப்பு இல்லை: வங்கக் கடலில் வரும் 23-ல் உருவாகிறது ‘டானா’ புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Oct 2024சென்னை : வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அணியில் வாஷிங்டன் சுந்தர்
20 Oct 2024நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மக்கள் மத்தியில் அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது : எடப்பாடி பழனிசாமி பேச்சு
20 Oct 2024நெல்லை : தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக பேசினார்.
-
நியூசி.க்கு எதிரான தோல்வி: கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
20 Oct 2024பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
அபார வெற்றி...
-
வரும் ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவார் : சி.எஸ்.கே. சி.இ.ஓ. நம்பிக்கை
20 Oct 2024சென்னை : ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாட வேண்டும் என எங்களுக்கும் ஆசைதான் என்று தெரிவித்த சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ.
-
6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
20 Oct 2024வால்பாறை : வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா
20 Oct 2024துபாய் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
-
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா
20 Oct 2024மும்பை : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள 99 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு
20 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளாக மூடியுள்ள ரேஷன் கடைகள் இன்று திறக்கப்பட்டு, தீபாவளிக்கு இலவச சர்க்கரை, அரிசி விநியோகம் தொடங்குகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சீமானின் பேச்சால் வேதனை : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
20 Oct 2024திருச்சி : தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சீமானின் பேச்சு வேதனையாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
20 Oct 2024சென்னை : தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை விதித்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை
-
36 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் நியூசி., அணி வெற்றி
20 Oct 2024பெங்களூரு : 36 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2024.
21 Oct 2024 -
வாரணாசியில் ரூ.6,100 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி
20 Oct 2024வாரணாசி : தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
-
ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனை: தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை
21 Oct 2024சென்னை : ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.
-
கிருஷ்ணா பட பூஜை
21 Oct 2024கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. டான் கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பாதுரை பா
-
ஆர்யமாலா விமர்சனம்
21 Oct 2024உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா. இப்படத்தின் கதை 1982-ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
-
மன்னர் சார்லசுக்கு எதிராக ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பெண் எம்.பி..!
21 Oct 2024கேன்பெர்ரா : இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு நேற்று சென்று உரையாற்றினார்.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு
21 Oct 2024சேலம், தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
-
ஆலன் விமர்சனம்
21 Oct 2024சிறு வயதில் விபத்து ஒன்றில் தன் குடும்பத்தை பறிகொடுத்த நாயகன் வெற்றி, தனது மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு செல்கிறார்.
-
தீபாவளிக்கு வெளியாகும் ப்ளடி பெக்கர்
21 Oct 2024இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’.
-
காவலர் வீரவணக்க நாள்: காவலர்கள் நினைவு சின்னத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மரியாதை
21 Oct 2024சென்னை, பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்
-
வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம்: காலிஸ்தான் தீவிரவாதி புதிய எச்சரிக்கை
21 Oct 2024புதுடெல்லி, வரும் நவ.
-
கனடா - இந்திய அரசியல் உறவுகள் முறிவதற்கு ட்ரூடோ முக்கிய காரணம்: இந்திய தூதர்
21 Oct 2024புதுடில்லி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் கு
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிளாக் படக்குழு
21 Oct 2024அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.