எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பிரிவுத் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார். அவரின் பரிந்துரையின்படியே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியஹு. இருப்பினும் அதிபர் ட்ரம்ப் அவற்றைக் கண்டு கொள்வதாக இல்லை. ஆட்குறைப்புக்கு ஆயத்தமாகலாம் என்று அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது 9,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்துறை, எரிசக்தி, பணி ஓய்வு பெற்றோர் விவகாரங்கள் துறை, வேளாண் துறை, சுகாதாரத் துறை, சேவைகள் துறை எனப் பல்வேறு துறைகளிலும் இந்த ஆட்குறைப்பு நடந்துள்ளது. சில அமைப்புகளில் 70% வரை ஆட்குறைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து ஓராண்டுகூட நிறைவுபெறாத ‘தகுதிகாண்’ காலத்தில் இருப்பவர்களாவர். மேலும், பணிப்பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த ஊழியர்கள் ஆவர்.
முன்னதாக செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்ததாகவும் அதற்கு ஆயிரக்கணக்கானோர் இசைவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம்வரை வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ராஜினாமா செய்ய முன்வந்தனர்.
ஆனால், செலவு தொடர்பான பட்ஜெட் விதிகள் வரும் மார்ச் 14-ம் தேதியுடன் முடிவடைந்துவிடும், எனவே ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கு அதன்பிறகு அறிவித்தபடி ஊதியம் வழங்குவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று தொழிற்சங்கங்கள் ஊழியர்கள் மத்தியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் எதிர்ப்புகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ட்ரம்ப். பெடரல் அரசாங்கம் கடனில் இருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப் தேவையற்ற பதவிகளுக்காக அதிகப்பணம் வீணடிப்பதால் பண இழப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு இந்த பணிநீக்க நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது
18 Feb 2025கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
18 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
-
பயர் விமர்சனம்
18 Feb 2025நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
-
2026 தேர்தலில் த.வெ.க.வுடன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி
18 Feb 2025சென்னை: 2026 தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம்பெறுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
-
மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
18 Feb 2025சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களுக்கான மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர
-
திருச்சி, மதுரை டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
18 Feb 2025சென்னை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு
-
அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு
18 Feb 2025சென்னை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிரண
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-02-2025.
18 Feb 2025 -
உ.பி. பேரவையில் கவர்னரை வெளியேற சொல்லி எதிர்க்கட்சியினர் கடும் அமளி கோ பேக் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு
18 Feb 2025லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
18 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்: முதல்வர் புகழாரம்
18 Feb 2025சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என்று பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில
-
நாயகன் நாயகி இல்லாத வித்யாசமான படம் எஸ்.ஏ.சி. பேச்சு
18 Feb 2025எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி.
-
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு
18 Feb 2025சான் ஜோஷி : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
-
சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சி தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்
18 Feb 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பொலிவியாவில் பஸ் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் பலி
18 Feb 2025தென் அமெரிக்க : பொலிவியாவில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
தொழிலும், தொண்டும் வேறு வேறு: எச். ராஜாவுக்கு த.வெ.க. கட்சி பதில்
18 Feb 2025சென்னை: தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பா.ஜ.க.வுக்கு த.வெ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
-
புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம் இன்று பதவியேற்கிறார்
18 Feb 2025புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ள
-
வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்
18 Feb 2025டாக்கா : வங்காளதேசத்துக்கு மீண்டும் வருவேன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.
-
அகரம் பவுண்டேஷன் புதிய அலுவலக திறப்பு விழா
18 Feb 2025சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
மிரட்டி பணிய வைக்க முடியாது: தமிழ்நாட்டு மக்களை 2-ம் தர மக்களாக மாற்ற பா.ஜ.க. முயற்சி: துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
18 Feb 2025சென்னை, தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்
18 Feb 2025மிசிசாகா: கனடாவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் காயமடைந்தனர்.
-
காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம்
18 Feb 2025இரு பெண்களின் காதல் கதைதான் காதல் என்பது பொதுவுடமை படம்.
-
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
18 Feb 2025புது தில்லி: தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
-
மும்மொழி கொள்கைக்கு எதிராக இண்டியா கூட்டணியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
18 Feb 2025சென்னை : மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இண்டியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
18 Feb 2025சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.