எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ரயில் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது. கும்பமேளா நிறைவடையும் நாட்கள் நெருங்குவதால் பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமை இரவு டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்வதற்காக 13 மற்றும் 14-வது நடைமேடையில் ஆயிரக்கணக்கானோர் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த டெல்லி போலீஸார், “மகா கும்பமேளாவுக்கு செல்ல அதிக அளவில் பயணிகள் டெல்லி ரயில் நிலையத்தில் திரண்டனர். இதற்கேற்ப, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ் செல்லும் 4 ரயில்களில் 3 ரயில்கள் தாமதம் ஆனதால், கூட்டம் அதிகரித்தது. தவிர, 14-வது நடைமேடையில் பிரயாக்ராஜ் விரைவு ரயில் நின்றிருந்தது. அப்போது, 16-வது நடை மேடைக்கு பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் வந்தடைந்தது. இதுகுறித்த அறிவிப்பால் பயணிகள் குழப்பம் அடைந்து, ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, டெல்லி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், ரயில் நிலையத்தில் நெரிசலை நிர்வகிக்க டெல்லி காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறை ஆகியவற்றுடன் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தடுப்புகளை அமைத்துள்ளோம். ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க விரைவான எதிர்வினை குழுக்களை நியமித்துள்ளோம். சிசிடிவி கண்காணிப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நிகழ்நேர காட்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. பயணிகளுக்கு வழிகாட்டவும், பீதி அடையும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது ரயில் அறிவிப்புகளில் ஏற்பட்ட குழப்பத்தால், பயணிகள் கூட்டம், ஒரு குறுகிய படிக்கட்டு வழியாக 16-வது நடைமேடையை நோக்கி விரைந்தனர். மேலே செல்ல முயன்வர்களுக்கும் கீழே இறங்க முயன்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, டெல்லி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து தற்போது கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
திருப்பரங்குன்றம் வழிபாட்டு தளம் குறித்த அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
19 Feb 2025மதுரை : திருப்பரங்குன்றம் வழிபாட்டு தளம் குறித்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலிய பணய கைதிகளை ஒரேகட்டமாக விடுதலை செய்ய ஹமாஸ் அமைப்பு நிபந்தனை
19 Feb 2025காசா : காசா முனையில் இருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேற்றினால் இஸ்ரேலிய பணய கைதிகளை ஒரேகட்டமாக விடுதலை செய்வோம் என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
-
இந்தியா வேகமாக வளர்ச்சியடையும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்
19 Feb 2025ஜெனீவா : தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
இந்தியை புகட்டுவது கட்டாயமெனில், இந்தி மொழியை ஒழிப்பதும் கட்டாயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
19 Feb 2025சென்னை, மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று வாசலில் பெண்கள் கோலமிட்டனர்.
-
ஆவின் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்
19 Feb 2025சென்னை : ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.
-
சாம்பியன்ஸ் கோப்பை: சாதனை படைக்க கோலிக்கு வாய்ப்பு
19 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
-
தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Feb 2025சென்னை : தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி
19 Feb 2025வாஷிங்டன், இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
எதிர்பார்க்காமல் உழைக்கக்கூடியவர்: செங்கோட்டையனுக்கு ஓ.பி.எஸ். புகழாரம்
19 Feb 2025கோவை, கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக் கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: சுப்மன் கில் முதல் இடம்
19 Feb 2025துபாய் : சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய தொடக
-
பாக். பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை தெரிவித்த 2 பேர் கைது
19 Feb 2025கார்வார் : பாகிஸ்தான் பெண்ணிடம் இந்திய கடற்படை ரகசியங்களை தெரிவித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உறுதி
19 Feb 2025பிரியாக்ராஜி, பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Feb 2025சென்னை : தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்
-
ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி: முன்னிலை பெற்றது விதர்பா
19 Feb 2025நாக்பூர் : ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதியில் மும்பை அணியை விட முன்னிலை பெற்றது விதர்பா அணி.
அரையிறுதி ஆட்டம்...
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா வரும் 26-ம் தேதி தேரோட்டம்
19 Feb 2025ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.
-
எந்த நிலையிலும் தமிழகத்திற்கான கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் : துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்
19 Feb 2025திருச்சி : எந்த நிலையிலும் தமிழகத்திற்கான கல்வி, நிதி பெறும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியர்களின் கண்ணியம் காக்க மத்திய பா.ஜ. அரசு தவறிவிட்டது: மல்லிகார்ஜூன கார்கே காட்டம்
19 Feb 2025புதுடெல்லி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா திருப்பிய அனுப்பி நாடு கடத்தியபோது அவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிர
-
பாலியல் புகார்களை வைத்து அவதூறு பரப்புவதே வேலை : இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
19 Feb 2025சென்னை : பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி உள்ளார்.
-
வரும் 25-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது
19 Feb 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் முறைகேட்டை தடுக்க புதிய நடைமுறை
19 Feb 2025சென்னை : பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக தேர்வுகள் இயக்ககம் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-02-2025.
19 Feb 2025 -
மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட் கருத்து
19 Feb 2025சென்னை, வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
-
மாற்று நில முறைகேடு வழக்கு: கர்நாடகா முதல்வரை விடுவித்து லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவு
19 Feb 2025பெங்களூரு, மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோரை விடுவித்து லோக் ஆயுக்த நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
-
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை ஆப்கன் தூதரகம் குற்றச்சாட்டு
19 Feb 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்