முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2025      இந்தியா
Air

Source: provided

நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு பிமான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல நேற்றுமுன்தினம் இரவு 396 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. நள்ளிரவில் இந்திய வான்பரப்பில் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். உடனடியாக அருகில் உள்ள நாக்பூர் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டனர். அதிகாரிகள் அனுமதி அளித்ததும் நாக்பூர் ஏர்போர்ட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து