எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்துவரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ். சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ். மணி, ஏ.என். பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்திரைசெல்வி, வி. நாகு, பி. சீதாலட்சுமி, ஆர்.எஸ். ஜெயலதா, எஸ். ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க சண்முக செல்வகணபதி, ப. ரங்கராஜ், வளப்பக்குடி வீரசங்கர், இரா. சீனிவாசன், செ. நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் மொத்தம் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-02-2025.
26 Feb 2025 -
மே 2-ம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறப்பு
26 Feb 2025ருத்ரபிரயாக் : உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் மே 2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
-
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Feb 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா-உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்
26 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம் உக்ரைன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஓமனிலிருந்து தப்பிய தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்
26 Feb 2025கா்நாடகா : ஓமன் நாட்டி தப்பிய 3 தமிழக மீனவர்கள் கர்நாடக கடற்கரையில் பிடிப்பட்டனர்.
-
ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்
26 Feb 2025சென்னை, பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
26 Feb 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க.வின் மும்மொழி கொள்கைக்கு எதிரான பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
26 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் விய
-
கலைஞர்கள் 45 பேருக்கு ரூ.45 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Feb 2025சென்னை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்
-
தமிழ்நாடு அரசியலில் இன்னும் பல பூகம்பங்கள் நடக்கவுள்ளது : ஆதவ் அர்ஜூனா பேச்சு
26 Feb 2025சென்னை : தமிழ்நாடு அரசியலில் இன்னும் பல பூகம்பங்கள் நடக்கப்போகிறது என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
இந்தியை இன்னமும் தி.மு.க. எதிர்ப்பது ஏன்? தொண்டர்களுக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
26 Feb 2025சென்னை, இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்
-
கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடியில் காலணி உற்பத்தி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
26 Feb 2025சென்னை, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழாவில் #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் தலைவர் விஜய்
26 Feb 2025சென்னை : மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று (பி
-
வரும் 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை த.வெ.க. உருவாக்கும்: 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு
26 Feb 2025சென்னை, த.வெ.க. பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள்.
-
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
26 Feb 2025கோவை, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமைியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தெலங்கானா பள்ளிகள் அனைத்திலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கியது மாநில அரசு
26 Feb 2025தெலங்கானா, தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சூடானில் ராணுவ விமானம் விபத்து: 46 பேர் உயிரிழப்பு
26 Feb 2025ஓம்துர்மன், சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
-
மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு
26 Feb 2025சென்னை : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு அழைப்பு விட
-
உள்ளூரிலேயே விலைபோகாதவர்: பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் கே.என்.நேரு
26 Feb 2025திருச்சி : திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, பிரசாந்த் கிஷோரை விமர்சித்துள்ளார்.
-
கணினிக்கல்வி கற்பிக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
உலக அளவில் பாராட்டக்கூடிய அளவில் தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
26 Feb 2025சென்னை, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என்று 2,642 பேருக்கு மருத்துவ அலுவலர்
-
பஞ்சாப், லூதியானா மேற்கு இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சீவ் அரோரா போட்டி
26 Feb 2025லூதியானா, பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
-
கோவையில் புதிய பா.ஜ.க. அலுவலகம் அமித்ஷா திறந்து வைத்தார்
26 Feb 2025கோவை, புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
-
பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்குகிறது: முன்னேற்பாடு பணிகளில் தேர்வுத்துறை தீவிரம்
26 Feb 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத
-
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது : வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
26 Feb 2025சென்னை : தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது என்று திருமாவளவன் கூறினார்.