எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,ஏப்.7 - பரமக்குடியில் சொத்து தகராறில் கூலிப்படையினர் மூலம் பா.ஜ.க. பிரமுகர் பைப்வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ்சுவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் என்பவரின் மகன் முருகன்(வயது46). முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலரான இவர் வாஜ்பாய் மன்ற தலைவராக இருந்து வந்தார். தேங்காய் கடை வைத்து நடத்திவந்த இவர் கடந்த 19-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முருகன் கொலைசம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த விசாரணையில் சொத்து பிரச்சனை தொடர்பாக கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர புலன்விசாரணை நடத்தி தற்போது சென்னை டி.நகரில் வசித்துவரும் பரமக்குடி நாகூர்கனி என்பவரின் மகன் ராஜாமுகம்மது(58), பரமக்குடி திருவள்ளுவர் நகர் முத்துவயல் முத்துச்சாமி மகன் மனோகரன்(41), மதுரை காயிதேமில்லத்நகர் சுல்த்தான் அலாவுதீன் மகன் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா(35), மதுரை தாசில்தார் பள்ளிவாசல் தெரு அகம்மது என்பவரின் மகன் சாகுல்ஹமீது(37) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட முருகனின் தாத்தா சிவஞானம் செட்டியாருக்கு வைகை நகர் பகுதியில் 6ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அவர் இறந்தபின்னர் மகன் கதிரேசன் செட்டியார் அந்த நிலத்தை பராமரித்து வந்துள்ளார். அப்போது, பரமக்குடி வேந்தோனி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி என்ற ராஜாமுகம்மது மேற்கண்ட சொத்தை தனது அக்காள் மகன் மனோகரன் பெயரில் போலி பத்திரம் தயாரித்து சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். இதுதொடர்பாக தொடாரப்பட்ட வழக்கில் கதிரேசன் செட்டியாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது கதிரேசன் செட்டியார் குடும்பத்தினர் மீது விரோதம் கொண்டு இருந்துள்ளார். மேலும், மேற்கண்ட சொத்தினை கதிரேசன் செட்டியாரின் மகன்களான கொலைசெய்யப்பட்ட மருகன் மற்றும் அவரின் தம்பி சிவக்குமார் ஆகியோர் விற்க முயலும்போதெல்லாம் ராஜாமுகம்மது மிரட்டல் விடுத்து வந்ததோடு, வாங்குபவர்களையும் தடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி மேற்கண்ட சொத்தினை முருகன், சிவக்குமார் ஆகியோர் மதுரை மேலூரை சேர்ந்த ராஜாரபீக் என்ற ராஜாபாய் என்பவரிடம் ரூ.8கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த ராஜாமுகம்மது இதுதொடர்பாக பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க தனக்கு ரூ.ஒரு கோடியே 50லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு முருகன், சிவக்குமார் ஆகியோர் ரூ.85லட்சம் கொடுத்துள்ளனர். கேட்ட தொகை கிடைக்காததால் ஆத்திரமடைந்த ராஜாமுகம்மது தனது அக்கா மகன் மனோகரன் என்பவருடன் சேர்ந்து மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் மூலம் முருகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதன்படி மேற்படி மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் வாழைக்காய் என்ற ரபீக்ராஜா, சாகுல்ஹமீது மற்றும் இன்னொருவர் மூலம் கொலை திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றி உள்ளனர். இதற்காக ராஜாமுகம்மது கூலிப்படையினருக்கு ரூ.2லட்சம் வழங்கி உள்ளார். கொலை சம்பவம் நடந்ததும் இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது ராஜாமுகம்மதுவின் பிரச்சனை தெரியவந்தது. இதுதொடர்பாக முதலில் சிக்கிய அவரின் மருமகன் மனோகரனை பிடித்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கண்ட 4பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூலிப்படையினரின் மூளையாக செயல்பட்ட மதுரையை சேர்ந்த கூலிப்படைதலைவன் ஒருவனை தேடிவருகிறோம். இவ்வாறு கூறினார். கைது செய்யப்பட்ட 4பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காட்டிக்கொடுத்த ரெயில் டிக்கெட்:
முருகனை கொலை செய்ய கூலிப்படையினர் மூலம் சதித்திட்டம் போட்ட ராஜாமுகம்மது தன்மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் இருப்பதுபோன்று காட்டுவதற்கு தன்பெயரில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். போலீசாரின் இந்த விசாரணையில் அவர் சம்பவம் நடந்தபோது சென்னையில் இல்லை என்பதும், முன்பதிவு செய்த ரெயிலில் பயணம் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசாரின் பிடியில் ராஜாமுகம்மது வசமாக சிக்கி உள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வாழைக்காய் என்ற ரபீக்ராஜா பைப் வெடிகுண்டு வீசி கொலை செய்வதில் கைதேர்ந்தவன். மேலும், பிரபல பைப் வெடிகுண்டு குற்றவாளி போலீஸ் பகுர்தீன் என்பவருடன் சேர்ந்து பல்வேறு குற்றசம்பவங்களில் ்டுபட்டுள்ளார். கூலிப்படையினர் முருகனை கொலைசெய்ய வீசிய 3பைப் வெடிகுண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்துள்ளது. வெடிக்காத 2பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024