முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் - தென்காசியில் போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 20 - சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் - தென்காசி தொகுதியிலும், துணை தலைவர் ஏ.நாராயணன் - நான்குனேரியில் தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி தந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கட்சித்தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்த வெற்றிக் கூட்டணிய்ல போட்டியிட முடிவெடுத்ததின்படி சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி மற்றும் நான்குநேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் என்னையும், நமது இயக்கத்தி துணைத்தலைவர் ஏ.நாராயணனையும்  போட்டியிட செய்வதென்று உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசி தொகுதியில் நானும், நான்குநேரி தொகுதியில் கட்சியின் துணைத்தலைவர்  ஏ.நாராயணனும் உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் இத்தேர்தலில் போட்டியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

சமத்துவ மக்கள் கட்சி, அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி மற்றும் நான்குனேரி சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி தந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்காசி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்களை பெரும் வெற்றியடைய செய்வதோடு, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரும் வெற்றிபெறவும், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா பதவியேற்கவும், சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சமதுத்துவ மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்களது மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களோடும், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களோடும் தொடர்பு கொண்டு இயக்கத்தின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கி அனைவரையும் வெற்றிப்பெற செய்வதில் சமத்துவ மக்கள் கட்சியின் பங்கு பெருமளவில் இருந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago