எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு நேரில் ஆய்வு செய்து விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று முன் தினம் மாலையில் அதி தீவிர புயலாக வலுவடைந்தது.
அதி தீவிர புயலாக மாறிய பின்னர் கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது.
கரையைக் கடந்தது
இரவு 10.45 மணிக்கு அதி தீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது, நேற்று அதிகாலைக்குள் புயலின் முழுப்பகுதியும் கடந்தது.
புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது.
இந்த புயல் கரையை கடந்த பின்னர், அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகவும், அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர் மழை காரணமாக சென்னை மட்டுமின்றி கடலூர், புதுச்சேரியிலும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் காற்றுடன் பெய்த கனமழையால் புதுச்சேரி, கடலூரில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் மனம்பாடி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
முதல்வர் நேரில் ஆய்வு
இந்த நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக பிற்பகலில் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி பகுதியில் உள்ள குமாரமங்கலத்தில், பலத்த காற்றால் சாய்ந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி - கீழ்க்குமாரமங்கலம் கிராமப் பகுதிகளில் புயலால் சேதமடைந்துள்ள வாழைத் தோப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
நிவாரண பெட்டகம் வழங்கிய முதல்வர்
தேவனாம்பட்டினம், அரசு முகாமில் புயல் மற்றும் மழைநீரினால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
மீனவர்களிடம் குறைகேட்டார்
கடலூர் மாவட்ட மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அவர்களுடைய படகுகளையெல்லாம் கடலூர், முதுநகர் துறைமுகப் பகுதியில் பத்திரப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மீனவ கிராம மக்களைச் சந்தித்து அவர்களிடம் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக் கொண்டதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் பணியினரிடமும் மீட்புப் பணி நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் எம்.சி. சம்பத், கலெக்டர் மற்றும் வேளாண் துறை செயலாளர் உள்ளிட்டோரும் சென்றனர். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதல்வர் பார்வையிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 day 12 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 2 days ago |
-
பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை : தமிழக பள்ளிக்கல்வித்துறை தகவல்
20 Sep 2024சென்னை : தமிழகத்தல் பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
20 Sep 2024சென்னை : பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Sep 2024சென்னை : தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
20 Sep 2024கொழும்பு : இலங்கையில் இன்று சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி: மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி தேர்வு
20 Sep 2024நியூயார்க் : உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
-
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்ப எங்கள் மீது குற்றச்சாட்டு: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகன் மோகன் கருத்து
20 Sep 2024விஜயவாடா, ஆந்திராவில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஜெகன் மோகன் ர
-
அக். 27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு : நடிகர் விஜய் அறிவிப்பு
20 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
-
புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்
20 Sep 2024சென்னை : நமது இலக்கை அடையும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
20 Sep 2024பெய்ரூட் : பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2024.
20 Sep 2024 -
ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு
20 Sep 2024பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்
-
29 தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
20 Sep 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
அதிபர் தேர்தல்: நேரடி விவாதத்திற்கு பின் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிப்பு
20 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் செல்வாக்கு நேரடி விவாதத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முட
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு
20 Sep 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
-
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Sep 2024சென்னை, பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே ப
-
புதுக்கோட்டையில் விபத்து: கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் பலி
20 Sep 2024புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
25-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வலியுறுத்துகிறார்
20 Sep 2024சென்னை :சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
-
இந்திய வரலாற்றை மாற்றியமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பதிவு
20 Sep 2024சென்னை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுன் ரூ.480 உயர்வு
20 Sep 2024சென்னை : கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் வரவேற்போம்: அமைச்சர் எ.வ.வேலு பதில்
20 Sep 2024வேலூர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வரவேற்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோவில் பிரசாத லட்டுவின் தரம் பற்றிய விவகாரம்: தேவஸ்தானம் விளக்கம்
20 Sep 2024திருப்பதி : திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு உலக புகழ்பெற்றது ஆகும்.
-
ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையுங்கள் : நக்சல்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
20 Sep 2024புதுடெல்லி : நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இல்லாவிட்டால் அரசின்
-
துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி ? அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பு
20 Sep 2024சென்னை, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என செய்தியாளரை கண்டிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
பாலியல் புகாரில் கைதான ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Sep 2024ஐதராபாத் : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
-
தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: வரும் 30-ம் தேதி வரை விநியோகம்
20 Sep 2024திருமலை, கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.