எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்கள் தனது 6-வது கட்ட சூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரத்தை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து 5-வது கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்த வகையில் வரும் 17-ம் தேதி தனது 6-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் தொடங்குகிறார். இதன்படி வரும் 18, 19-ம் தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காலை 11.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி, 12 மணியளவில் திருச்செந்தூரில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடுகிறார். அதை தொடர்ந்து 1.40 மணியளவில் ஓட்டப்பிடாரம் தொகுதி மாப்பிள்ளையூரணியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொள்கிறார்.
அதை தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரும் 18-ம் தேதி முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அன்றைய தினம் 10 மணியளவில் ராதாபுரம் தொகுதி வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
அதை தொடர்ந்து 11.40 மணியளவில் நாங்குநேரி தொகுதி, களக்காடு அருணா திருமண மண்டபத்தில் மகளிர் குழுவினருடனும், 01.05 மணியளவில் அம்பாசமுத்திரம் தொகுதி மேலச்செவல், பேரூராட்சி திருமண மண்டபத்தில் இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். அதை தொடர்ந்து மாலை 4 மணியளவில் ஆலங்குளம் ஏ.ஜே. மகாலில் பாசறை நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். அதை தொடர்ந்து மாலை 5.10 மணியளவில் தென்காசி தொகுதி பாவூர் சத்திரம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார்.
அதை தொடர்ந்து 6.30 மணியளவில் தென்காசி, இசக்கி மகாலில் மகளிர் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிகளில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என். கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதை தொடர்ந்து 19-ம் தேதி காலை 10 மணிக்கு கடையநல்லூர் பள்ளிவாசல் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து 11.30 மணிக்கு வாசுதேவநல்லூர் தொகுதி புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் மகளிர் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார்.
12.15 மணிக்கு சங்கரன்கோவில் வைஷ்ணவி மகாலில் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 6 days ago |
-
போபர்ஸ் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியது சி.பி.ஐ.
05 Mar 2025புதுடெல்லி : 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்கு சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன.
-
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
05 Mar 2025மணிப்பூர் : மணிப்பூரில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
05 Mar 2025சென்னை : கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்
-
உ.பி. கும்பமேளாவில் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி
05 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாயை ஈட்டியுள்ளார் படகோட்டி ஒருவர்.
-
ரோகித்தின் கிரிக்கெட் பயணம் குறித்து கவுதம் காம்பீர் பதில்
05 Mar 2025துபாய் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் குறித்து காம்பீர் பதிலளித்துள்ளார்.
எதிர்காலம் என்ன?
-
இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
05 Mar 2025சென்னை : இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது.
-
சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்: கோலி
05 Mar 2025துபாய் : சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5-வது முறையாக....
-
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள்
05 Mar 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (5.3.2025) தலைமைச் செயலகத்தில், பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
05 Mar 2025சென்னை : சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
தென்மாநில எம்.பி.க்களின் கூட்டு நடவடிக்கைக்குழு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
05 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட த
-
உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர பிரிட்டனுக்கு அமெரிக்கா தடை
05 Mar 2025அமெரிக்கா : அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
-
கொலையாளிகளை விட பெரிய அச்சுறுத்தல்கள்: ஊழல்வாதிகள் குறித்து சுப்ரீம கோர்ட் வேதனை
05 Mar 2025சென்னை : அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்
-
திருப்பூரில் போலீஸ் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி கொள்ளை
05 Mar 2025திருப்பூர் : திருப்பூரில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.10 கோடி கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பாலக்கோடு அருகே விபத்தில் 3 பேர் பலி
05 Mar 2025தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள்
05 Mar 2025சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
-
இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும்: அமெரிக்கா
05 Mar 2025அமெரிக்கா : மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதியை நடப்பாண்டில் இந்தியா அதிகரிக்கும் என அமெரிக்க அரசின் விவசாயத்துறை தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவக்கம்: சாம்பல் புதனை முன்னிட்டு தேவாலயங்களில் திருப்பலி
05 Mar 2025சென்னை : கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் (மாா்ச் 5) தொடங்கியது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Mar 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 10-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது: தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு : அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
05 Mar 2025சென்னை : 30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது என்றும் தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்றும் மக்களவை தொகுதி மறுவரையறை உள்
-
வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
05 Mar 2025சென்னை : வேளாண் நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
நெடுஞ்சாலை மதுக்கடைகளை வரும் 13-ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
05 Mar 2025புதுடெல்லி : உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை வருகிற 13-ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் யோகி ஆதித்யாந
-
தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவுக்கு நினைவு திரும்பியது
05 Mar 2025சென்னை : பிரபல சினிமா பின்னணி இசை பாடகி கல்பனா (வயது 44). பல சினிமா பாடல்களை பாடியுள்ள இவர், சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வந்தார்.
-
டெல்லி ரயில் கூட்ட நெரிசலில் பலி சம்பவம்: மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம்
05 Mar 2025டெல்லி : ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
-
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப். 2 முதல் வரி விதிப்பு அமல் : அமெரிக்க அதிபர் அறிவிப்பு
05 Mar 2025வாஷிங்டன் : இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்
-
ஓமர்சாய் ஆல்-ரவுண்டரில் முதலிடம்
05 Mar 2025சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது