எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு அளிக்கும் விதமாக கெஜ்ரிவால் தீர்ப்பை சுட்டிக் காட்டி இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இதில் அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டார். தற்போது, நீதிமன்ற காவலில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதைப் போல தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தானும் ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு உட்பட்டது இந்த வழக்கு. தேர்தல் பிரசாரம் செய்ய எனது மனுதாரருக்கும் இடைக்கால ஜாமீன் தேவை" என வாதிட்டார்.
அமலாக்க இயக்குனரகத்தை விசாரிக்காமல் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மே 20-ஆம் தேதிக்கு பட்டியலிடுவதாகக் கூறினர். சோரன் தரப்பில் ஆஜரான சிபல் மற்றும் அருணாப் சவுத்ரி ஆகியோர், "அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நீண்ட நாள் எடுத்துக்கொண்டால் அது அவருக்கு பாரபட்சம் காட்டுவதாக ஆகிவிடும்" என்று தெரிவித்தனர்.
இந்த வாரம் நிறைய விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதால், அதிக வேலை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மே 17-ஆம் தேதிக்கு வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், மே 17-ஆம் தேதிக்குள் இது விஷயத்தில் பதில் அளிக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்க் செய்த மனுவை விசாரித்த கடந்த மே 3-ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இடைக்கால ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் உயர் நீதிமன்றம் அன்றைய தினமே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இதை எதிர்த்து தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஜார்க்கண்டில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மூன்று கட்டங்களாக மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 day 12 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 6 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 2 days ago |
-
பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை : தமிழக பள்ளிக்கல்வித்துறை தகவல்
20 Sep 2024சென்னை : தமிழகத்தல் பள்ளிகளுக்கு 28-ம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
20 Sep 2024சென்னை : பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Sep 2024சென்னை : தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
20 Sep 2024கொழும்பு : இலங்கையில் இன்று சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
25-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வலியுறுத்துகிறார்
20 Sep 2024சென்னை :சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
-
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்ப எங்கள் மீது குற்றச்சாட்டு: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகன் மோகன் கருத்து
20 Sep 2024விஜயவாடா, ஆந்திராவில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஜெகன் மோகன் ர
-
உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி: மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி தேர்வு
20 Sep 2024நியூயார்க் : உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.
-
அக். 27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு : நடிகர் விஜய் அறிவிப்பு
20 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு
20 Sep 2024பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2024.
20 Sep 2024 -
புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்
20 Sep 2024சென்னை : நமது இலக்கை அடையும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
20 Sep 2024பெய்ரூட் : பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக
-
3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுன் ரூ.480 உயர்வு
20 Sep 2024சென்னை : கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
29 தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
20 Sep 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
அதிபர் தேர்தல்: நேரடி விவாதத்திற்கு பின் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிப்பு
20 Sep 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் செல்வாக்கு நேரடி விவாதத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முட
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு
20 Sep 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
-
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Sep 2024சென்னை, பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே ப
-
புதுக்கோட்டையில் விபத்து: கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் பலி
20 Sep 2024புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
இந்திய வரலாற்றை மாற்றியமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பதிவு
20 Sep 2024சென்னை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் வரவேற்போம்: அமைச்சர் எ.வ.வேலு பதில்
20 Sep 2024வேலூர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் வரவேற்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோவில் பிரசாத லட்டுவின் தரம் பற்றிய விவகாரம்: தேவஸ்தானம் விளக்கம்
20 Sep 2024திருப்பதி : திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு உலக புகழ்பெற்றது ஆகும்.
-
ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையுங்கள் : நக்சல்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
20 Sep 2024புதுடெல்லி : நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இல்லாவிட்டால் அரசின்
-
திருப்பதி லட்டு விவகாரம்: அறிக்கையளிக்க தேவஸ்தானத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
20 Sep 2024அமராவதி : ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்த விவகாரத்தி
-
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
20 Sep 202410 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி ? அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பு
20 Sep 2024சென்னை, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என செய்தியாளரை கண்டிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.