எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், தியாகராய நகர், சிஐடி நகர், ஸ்ரீராம் பேட் பகுதியில் நடைபெற்ற மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நோய்த்தடுப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்னரும், பருவமழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின் போதும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளன. கடந்த ஆண்டை பொறுத்தவரை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என்ற வகையில் 26,000 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மிகப்பெரிய அளவில் நோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டை பொறுத்தவரை தமிழகத்தில் அதிகமான டெங்கு பாதிப்பாக 23,294 பேருக்கு ஒரே ஆண்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, 65 பேர் மரணமடைந்திருந்தனர். அதே போல் 2012-ம் ஆண்டு 66 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலை இருந்தது. தொடர்ந்து 70 பேர் வரை உயிரிழந்த அந்த நிலையினை மாற்றி, உள்ளாட்சி நிர்வாகங்கள் குறிப்பாக ஊரக உள்ளாட்சி, நகர்புற உள்ளாட்சி போன்ற அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், டெங்கு பாதிப்புகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.
டெங்கு, எலிக்காய்ச்சல், உன்னிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இன்புளுயன்சா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியும் பணியினை மக்கள் நல்வாழ்வுத்துறையும், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்க தொடங்கியுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உன்னி காய்ச்சல் கடலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. எலிக் காய்சலை பொறுத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சள் காமாலையை பொறுத்தவரை சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்புளுயன்சா காய்ச்சல் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை 6,565 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பன்றிக் காய்சலினால் 390 பேரும், புளு காய்ச்சலினால் 56 பேரும், எலிக் காய்ச்சலினால் 1,481 பேரும், உன்னி காய்ச்சலினால் 2,639 பேரும், வெறி நாய்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேரும், மஞ்சள் காமாலையினால் 1750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றிக் காய்ச்சல், புளு காய்ச்சல், எலிக் காய்ச்சல், உன்னி காய்ச்சல், மஞ்சள் காமாலையினால் உயிரிழப்புகள் இல்லை.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையினை அணுகாததன் காரணமாகவும், அவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததன் காரணமாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் மாதங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையினை எதிர்நோக்கியுள்ள மாதங்களாகும். எனவே நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் தமிழக எல்லைகளை பாதுகாக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற அனைத்து வாகனங்களையும், பயணிகளை பரிசோதிக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடுங்கனி (Nadugani), சோழடி (Choladi), தளுர் (Thaloor), நம்பியார்குன்னு (Nambiyarkunnu), பட்டாவயல் (Paatavayal) போன்ற 5 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 5 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 2 days ago |
-
இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை திடீர் உயர்வு
16 Sep 2024சென்னை, எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2024
16 Sep 2024 -
முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக கோரிக்கை மனு
16 Sep 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் வி.சி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2024
16 Sep 2024 -
6.6 ரிக்டர் அளவில் கனடாவில் நிலநடுக்கம்
16 Sep 2024போர்ட் மெக்நீல், கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
-
2-வது முறையாக கொல்ல முயற்சி: டொனால்டு ட்ரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
16 Sep 2024ப்ளோரிடா, அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து
16 Sep 2024சென்னை, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் ராகுல்
16 Sep 2024புதுடெல்லி, ராகுல்காந்தி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார்.
-
பூமியை சுற்றும் புதிய மினி நிலவு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
16 Sep 2024வாஷிங்டன், பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
-
டெல்லியின் அடுத்த முதல்வா் அதிஷி ?
16 Sep 2024புதுடெல்லி, அடுத்த 2 நாள்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
நிபா வைரசால் இளைஞர் பலி: பொது மக்கள் விழிப்புடன் இருக்க கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Sep 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரசால் உயிரிழந்ததை அடுத்து, பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
-
ராணிப்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியிலான கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
16 Sep 2024சென்னை, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார
-
ராமசாமி படையாட்சியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
16 Sep 2024சென்னை, ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
தமிழக மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசின் செயலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
16 Sep 2024சென்னை, தமிழக மீனவர்களுக்கு மொட்டை போட்ட இலங்கை அரசின் கொடூர செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
விடுதி அறையில் மாட்டிறைச்சி சமையல்: 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
16 Sep 2024பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்
-
முல்லைப்பெரியாறு அணை குறித்து பேச்சு: கேரள மாநில அரசியல் கட்சிகளை கண்டித்து செப். 22-ல் போராட்டம்
16 Sep 2024கூடலூர், முல்லைப்பெரியாறு அணை குறித்த பேச்சு:கேரள அரசியல் கட்சியினரை கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
16 Sep 2024மேட்டூர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பெண்கள் கை காட்டியும் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட்
16 Sep 2024குமரி, பெண்கள் கை காட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளாவில் ஒரு நாளில் மட்டும்: ரூ.124 கோடிக்கு மது விற்பனை
16 Sep 2024திருவனந்தபுரம், ஓணம் பண்டிகை எதிரொலியாக கேரளாவில் ரூ.124 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
-
மதுஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாக உறுதி: தி.மு.க.-வி.சி.க. உறவில் எந்த விரிசலும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
16 Sep 2024சென்னை, “தி.மு.க. - வி.சி.க. இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம்.
-
மியான்மரில் புயல்: 113 பேர் உயிரிழப்பு
16 Sep 2024பாகோ, மியான்மரில் ஏற்பட்ட புயலுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்று அறிவிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
16 Sep 2024புதுடெல்லி, டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அடுத்த
-
நடிகர் சித்தார்த் - அதிதி திருமணம்
16 Sep 2024ஐதராபாத், நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
-
தாழ்த்தப்பட்டவர்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு: சமஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு
16 Sep 2024லக்னோ, அயோத்தியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடனும், பாதுகாப்புடனும் தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து வருவதாக சமா
-
தர்ஷன் நடிக்கும் 'கடலோர கவிதை'
16 Sep 2024ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த மியூசிக்கல் டிராமா நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும்.