எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை: மன்னார்காடு வனப் பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதி அளித்து உள்ளது. இருந்த போதிலும் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அணையை கேரள அரசு பராமரித்து வருகிறது. அதற்கான செலவை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த அணையில் இருந்து நாள்தோறும் 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். ஆனால் கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிறுவாணி அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று அந்த மாநில அணை பாதுகாப்பு குழு உத்தரவிட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 40 அடியை தாண்டினாலே கேரள அதிகாரிகள் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீரை திறந்து விட்டனர். இந்த அணை ஒருமுறை முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே அந்த ஆண்டு முழுவதும் கோவைக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கலாம். ஆனால் முழு கொள்ளளவை எட்டுவதற்கு கேரள அரசு அதிகாரிகள் அனுமதிக்கப்படாதாதல் ஏப்ரல், மே மாதங்களில் இந்த அணையில் இருந்து எடுக்கும் குடிநீரின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 8 அடிக்கு குறைவாக சென்றது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில்,கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் முன் கூட்டியே தொடங்கியது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியதும் அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விட்டனர். இரண்டு நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அணைக்கு சென்று நேரில் பார்வையிட்டு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்குமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அத்துடன் அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டினால் மட்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதி அளித்து உள்ளது. இருந்த போதிலும் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 5 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 2 days ago |
-
டைமண்ட் லீக் இறுதி சுற்று: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி
15 Sep 2024பிரஸ்சல்ஸ் : டைமண்ட் லீக் இறுதி சுற்றில் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
துலீப் கோப்பை டெஸ்ட் தொடர்: இந்தியா ஏ அணி வெற்றி
15 Sep 2024பெங்களூரு : துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
இரண்டாம் கட்ட...
-
ஓய்வு குறித்து நான் எதுவும் யோசிக்கவில்லை: அஸ்வின்
15 Sep 2024சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
-
பாக். முதல் பெண் நடுவர்
15 Sep 2024சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்தியாஸ் தேர்வாகியுள்ளார். இவர் இனிவரும் காலங்களில் சர்வதேச மகளிர் இருதரப்பு மற்றும் ஐ.சி.சி.
-
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதி: இந்தியா- தென் கொரியா இன்று மோதல்
15 Sep 2024ஹூலுன்பியர் : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சமையல் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை திடீர் உயர்வு
16 Sep 2024சென்னை, எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2024
16 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2024
16 Sep 2024 -
முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக கோரிக்கை மனு
16 Sep 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் வி.சி.க.
-
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் ராகுல்
16 Sep 2024புதுடெல்லி, ராகுல்காந்தி அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார்.
-
பூமியை சுற்றும் புதிய மினி நிலவு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
16 Sep 2024வாஷிங்டன், பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
-
6.6 ரிக்டர் அளவில் கனடாவில் நிலநடுக்கம்
16 Sep 2024போர்ட் மெக்நீல், கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து
16 Sep 2024சென்னை, இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2-வது முறையாக கொல்ல முயற்சி: டொனால்டு ட்ரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
16 Sep 2024ப்ளோரிடா, அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்
-
தமிழக மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசின் செயலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
16 Sep 2024சென்னை, தமிழக மீனவர்களுக்கு மொட்டை போட்ட இலங்கை அரசின் கொடூர செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மியான்மரில் புயல்: 113 பேர் உயிரிழப்பு
16 Sep 2024பாகோ, மியான்மரில் ஏற்பட்ட புயலுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ராமசாமி படையாட்சியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
16 Sep 2024சென்னை, ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
16 Sep 2024மேட்டூர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியிலான கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
16 Sep 2024சென்னை, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார
-
விடுதி அறையில் மாட்டிறைச்சி சமையல்: 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்
16 Sep 2024பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்
-
முல்லைப்பெரியாறு அணை குறித்து பேச்சு: கேரள மாநில அரசியல் கட்சிகளை கண்டித்து செப். 22-ல் போராட்டம்
16 Sep 2024கூடலூர், முல்லைப்பெரியாறு அணை குறித்த பேச்சு:கேரள அரசியல் கட்சியினரை கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
பெண்கள் கை காட்டியும் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட்
16 Sep 2024குமரி, பெண்கள் கை காட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில் பெயர் மாற்றம்
16 Sep 2024குஜராத், குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
-
நடிகர் சித்தார்த் - அதிதி திருமணம்
16 Sep 2024ஐதராபாத், நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
-
டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்று அறிவிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
16 Sep 2024புதுடெல்லி, டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அடுத்த