எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஏற்கெனவே வினேஷ் போகத் தெரிவித்திருந்தார். ஆனால், வருகின்ற அரியானா தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். “வருகின்ற அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத்தும், யோகேஸ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியாவும் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
_____________________________________________________________________________________________
ஐபிஎல் அணிகள் மீது குற்றச்சாட்டு
இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளை நடத்துகின்றன. இந்த ஆண்டு முதல் டெல்லி கிரிக்கெட் சங்கம் டெல்லி பிரிமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை ஆரம்பித்திருக்கிறது. இந்த டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கிறார்கள் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடும் பொழுது தடுமாறுவதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஜூனியர் மட்டத்தில் இருக்கும் தரத்தை விடமுதல் தர கிரிக்கெட்டின் தரம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களால் முதல் தர போட்டியில் சிறப்பாக விளையாட முடிவதில்லை. இதேபோல மாநில டி20 லீக்குகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் சையத் முஸ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பதற்கு ஐபிஎல் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தரத்திற்கு அவர்களால் இங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது நல்ல ஒரு யோசனை கிடையாது. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
_____________________________________________________________________________________________
ஜன்னிக் சின்னெர் சாம்பியன்
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நிறைவடைந்தது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சின்னெர், முதல் செட்டை டை -பிரேக்கர் வரை சென்று போராடி கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். சின்னெர் இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
_____________________________________________________________________________________________
சி.எஸ்.கே.வின் விழிப்புணர்வு வீடியோ
சென்னையில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி உலகம் முழுக்க விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். விபத்துகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று சிந்தித்து சென்னை மாநகரப் போக்குவரத்து துறை 'Zero is Good' என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பதில் தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கு முழு பங்களிப்பை அளிக்க போக்குவரத்து துறை முடிவெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 'Zero is Good' பிரச்சாரத்திற்க்கு ஐபிஎல் அணிகளில் ஒன்றான, அதுவும் சென்னையை அங்கமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் ருதுராஜ், ரகானே, பிராவோ, துபே, ரச்சின் ரவீந்திரா, துஷார் பாண்டே ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
_____________________________________________________________________________________________
ஆலோசகராக ஜாகீர் கான்?
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டது என இப்போதே அடுத்த சீசன் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர் கடந்த வருடமே அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது மோர்கலும் விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரரான ஜாகீர் கானிடம் அந்த அணியின் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அதனை ஏற்கும் பட்சத்தில் நிச்சயம் அது லக்னோ அணிக்கு வலுவானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________
ஒலிம்பிக் கிரிக்கெட்டில் ஸ்மித்
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவது குறித்து அந்த அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார். வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தரப்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என கூறப்பட்டாலும், எத்தனை அணிகள் பங்கேற்கலாம் போன்ற விவரங்கள் எதுவும் ஒலிம்பிக் குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. போட்டிகள் டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்குமென ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் நான் விளையாடலாம். உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால், மற்ற வீரர்களைக் காட்டிலும் என்னால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒப்பந்தம் முடிந்த ஓராண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்கும் என்றார்.
_____________________________________________________________________________________________
சென்னையில் மனு பாக்கர்
சென்னை வந்த ஒலிம்பிக் நாயகி மனு பாகர், பள்ளி மாணவிகளுடன் உற்சாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதித்துக் காட்டிய இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் நேற்று சென்னை வந்தார். முகப்பேரில் உள்ள வேலம்மாள் நெக்சஸ் பள்ளியில் அவருக்கு இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் பாராட்டு விழா தொடங்கியது. மனு பாகரின் வருகையால் உற்சாகம் அடைந்த பள்ளி மாணவர்கள் அவருக்கு ஆளுயர ரோஜா மாலையையும், தலையில் கிரீடம் ஒன்றையும் அணிவித்து கெத்தாக வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மனு பாகர், அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். பின்னர் மேடையில் அவர் அமர்ந்திருக்கும் போது அங்கு இருந்த மாணவிகள் மனு பாகரை நடனமாட அழைத்தனர். அவர்களின் அழைப்பை சற்றும் மறுக்காமல் ஏற்றுக் கொண்ட அவரும் உற்சாகமாக சேர்ந்து நடமாடினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 6 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Sep 2024சென்னை : வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள
-
நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
17 Sep 2024நெல்லை : நெல்லையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
நிபா வைரஸ்: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
17 Sep 2024சென்னை : கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக - கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட
-
146-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
17 Sep 2024சென்னை : பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்காக தொடர் நடவடிக்கை
17 Sep 2024கொழும்பு : பொருளாதார நெருக்கடி, தொடர் போராட்டங்களால் முடங்கி இருந்த இலங்கை சுற்றுலாத்துறை படிப்படியாக மீண்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகா
-
75 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க. கம்பீரமாக காட்சியளிக்கிறது: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Sep 2024சென்னை, ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க.
-
முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு: ஈரான் தலைவருக்கு இந்தியவெளியுறவு துறை கண்டனம்
17 Sep 2024புதுடெல்லி : இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக விமர்சித்த ஈரான் தலைவரின் பதிவுக்கு வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிகிச்சை பெற்று வந்த மேலாளர் பலி: மதுரை விடுதி தீ விபத்து : உயிரிழப்பு 3 ஆக உயர்வு
17 Sep 2024மதுரை : மதுரை தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் விடுதி மேலாளர் உயிரிழந்தார்.
-
பிரதமர் மோடிக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
17 Sep 2024சென்னை : பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
17 Sep 2024சென்னை : பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அ.தி.மு.க.வினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும் என்று நம்பிக்கை
-
பிரதமர் மோடி பிறந்த நாள்: ஜனாதிபதி முர்மு, அமித்ஷா, தலைவர்கள் வாழ்த்து
17 Sep 2024புதுடெல்லி : தனது 74-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தல
-
நாடு முழுவதும் மதுவிலக்கை பிரதமர் கொண்டு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது: சபாநாயகர் அப்பாவு
17 Sep 2024நெல்லை : பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Sep 2024மதுரை : கூல் லிப் போதை பொருள் வழக்கில் 3 நி்றுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
146-வது பிறந்த நாள்: சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி மாலையணிவித்து மரியாதை
17 Sep 2024சென்னை : தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.
-
பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து
17 Sep 2024சென்னை : பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
ஆப்கனில் போலியோ முகாம் நடத்த தலிபான் அரசு தடை
17 Sep 2024காபூல் : ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.
-
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய த.வெ.க. தலைவர் விஜய்
17 Sep 2024சென்னை : பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். &
-
பெண் மருத்துவர் கொலை: பதவி விலகக்கோரிய மம்தாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிட
-
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை : பிரதமர் மோடி விமர்சனம்
17 Sep 2024புவனேஷ்வர் : விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
17 Sep 2024புதுடெல்லி : நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
திராவிட சாயலில் விஜய் பயணிப்பது போல் தெரிகிறது: தமிழிசை பேட்டி
17 Sep 2024சென்னை : நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய ரஷ்யர்களுக்கு அதிபர் புடின் வேண்டுகோள்
17 Sep 2024மெக்சிகோ : வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யர்களுக
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2024ரோம், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024புதுடெல்லி : கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது
17 Sep 2024ராமநாதபுரம், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.