எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 870 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள குடியிருப்பு வளாகத்தில் டிபி. சோலார் நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) மற்றும் டாடா பவர் சோலார் லிமிடெட் (T.P Solar Ltd.) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சிப்காட் நிறுவனமானது, 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் மற்றும் டைடல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் (TNIHPL) என்ற சிறப்பு நோக்க முகமையை தமிழகத்தில் உள்ள தொழில் துறை தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்டது.
தற்போது, இச்சிறப்பு நோக்க முகமை, சிறுசேரி (807 படுக்கை வசதிகள்), கங்கைக்கொண்டான் (870 படுக்கை வசதிகள்), சூளகிரி (1495 படுக்கை வசதிகள்), இருங்காட்டுக்கோட்டை (801 படுக்கை வசதிகள்) மற்றும் செய்யாறு (441 படுக்கை வசதிகள்) ஆகிய ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்களில் குடியிருப்பு வளாகங்களை ரூ.204.50 கோடி திட்ட மதிப்பீட்டில் மொத்தம் 4,414 படுக்கை வசதிகளுடன் அமைத்து வருகிறது.
தமிழக அரசின் 2023-2024-ன் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் பணிபரியும் 1,500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வளாகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் குடியிருப்பு வளாகம் ஒன்றினை சுமார் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் 870 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளாகமானது சுமார் 1.20 லட்சம் சதுர அடி பரப்பில் தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டடமாக ஆறு ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்படவுள்ளது.
இங்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான, உட்புற சாலை, குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், தெரு விளக்குகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், இங்கு, சமையலறை மற்றும் சாப்பாட்டு வசதிகள், வெளிப்புற விளையாட்டு பகுதி, தொழிலாளர்கள் அறை, ஒவ்வொரு தளத்திலும் பொழுதுபோக்கு அரங்குகள், சலவை அறைகள், உலர்த்தும் பகுதி, மருத்துவ அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்படும்.
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற் பூங்காவில் அமைந்துள்ள டிபி. சோலார் நிறுவனம் 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் பி.வி. செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி வசதியை ரூ.4,300 கோடி முதலீட்டில், 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது. அப்பணியாளர்களில், 80 சதவீதம் பெண் பணியாளர்கள் ஆவர்.
டிபி. சோலார் நிறுவன தொழிற்சாலையில் பணிபுரியும் 500 பெண் பணியாளர்கள், பயன்பெறும் வகையில் சிப்காட் நிறுவனத்தின் சிறப்பு நோக்க முகமையான தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சிப்காட் கங்கைக்கொண்டான் தொழிற் பூங்காவில் அமைய உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி. ராஜா அவர்கள் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்6 hours 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 5 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 1 day ago |
-
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை துண்டுத்துண்டாக வெட்டிக் கொன்றவர் கைது: சி.சி.டி.வி. மூலம் சில மணி நேரத்தில் பிடிபட்டார்
19 Sep 2024சென்னை, சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இருந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2024.
19 Sep 2024 -
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க எடப்பாடி வலியுறுத்தல்
19 Sep 2024சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பது எப்போது ? அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில்
19 Sep 2024சென்னை, உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தமிழக காங். கட்சியின் செயற்குழு கூட்டம்: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கண்டித்து தீர்மானம்
19 Sep 2024சென்னை, தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
-
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு
19 Sep 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம், மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாந
-
கங்கைகொண்டான் சிப்காட் பூங்காவில் பெண்களுக்கான குடியிருப்பு வளாகம்: டி.பி. சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
19 Sep 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.
-
லெபனானில் வெடித்த வாக்கி டாக்கிகள் எங்களது தயாரிப்பு அல்ல: ஜப்பான் நிறுவனம் மறுப்பு
19 Sep 2024டோக்கியோ, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வாக்கி டாக்கிகள் தங்கள்
-
திருப்பதி பிரமோற்சவ விழா: மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை
19 Sep 2024திருப்பதி, கருட சேவையையொட்டி 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது: பா.ஜ.க.வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Sep 2024சென்னை, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பா.ஜ.க.வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சத்துணவு முட்டை விவகாரம்: உணவகத்திற்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்: சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்
19 Sep 2024திருச்சி, துறையூரில் தனியார் உணவத்திற்கு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகளை விற்பனை செய்த புகாரில் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார
-
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
19 Sep 2024மதுரை, மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Sep 2024சென்னை, அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தாம்பரம் மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க.
-
ஆந்திராவில் வரும் 1-ம் தேதி முதல் தனியார்மயமாகும் மதுபான கடைகள்: ரூ. 99-க்கு புதுவகை மது அறிமுகம்
19 Sep 2024அமராவதி, ஆந்திராவில் வரும் 1-ம் தேதி முதல் ரூ. 99-க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன.
-
காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்: பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Sep 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரத
-
விண்வெளியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து
19 Sep 2024நியூயார்க், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வலைதளங்களில்
-
நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார் ராகுல்: மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
19 Sep 2024ஜம்மு, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் ராகுல் நிற்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, அவர் நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருவத
-
உதகையில் நீர் பனிப்பொழிவு: கடும் குளிரால் மக்கள் அவதி
19 Sep 2024ஊட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று வெயில் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
19 Sep 2024சென்னை, தமிழகத்தில் இன்று 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிஷி அமைச்சரவையில் புதுமுகத்துக்கு வாய்ப்பு
19 Sep 2024புது டெல்லி, டெல்லியில், நாளை 21-ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி அமைச்சரவையில் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ.,வான, முகேஷ் அலாவத்திற்கு வாய்ப்பு கிடைக
-
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
19 Sep 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
-
ஹஜ் பயணம்: அமீரகத்தை சேர்ந்தவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: இஸ்லாமிய விவகாரத்துறை அறிவிப்பு
19 Sep 2024அபுதாபி, அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நேற்று முதல் வருகிற 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணைய
-
முன்கூட்டியே பேஜர்களை வெடிக்க வைத்த இஸ்ரேல்? வெளியான தகவலால் அதிர்ச்சி
19 Sep 2024டெல்அவிவ், லெபனானில், ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்களை செவ்வாயன்று மதியம் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து, இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்