எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 105 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 108 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் (இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்) முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதேபோல், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீராங்கனை விருது இளம் வீராங்கனையான ரிச்சா கோஷ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
______________________________________________________________________________
லூசியா கிங்ஸ் சாம்பியன்
6 அணிகள் கலந்து கொண்டுள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கயானா தரப்பில் அதிகபட்சமாக பிரிட்டோரியஸ் 25 ரன்கள் எடுத்தார். லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 139 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. செயிண்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் ஆரோன் ஜான்ஸ் 48 ரன்கள் எடுத்தார்.
______________________________________________________________________________
இந்தியா அபார வெற்றி
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன்படி குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் வங்காளதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இறுதியில் 11.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்த இந்திய அணி, வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
______________________________________________________________________________
தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற பெருமை கொண்ட, தீபா கர்மாகர் நேற்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- நீண்ட யோசனைக்குப் பிறகு, ஜிம்னாஸ்டிக்சில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்தேன். இந்த முடிவு எனக்கு எளிதானது அல்ல, ஆனால் இது சரியான நேரம். ஜிம்னாஸ்டிக்ஸ் எனது வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாகும், மேலும் ஒவ்வொரு கணத்திற்கும் – உயர்வு, தாழ்வு மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நான் ஓய்வு பெறுகிறேன் என்று எழுதுகிறேன். ஆனால் ஜிம்னாஸ்டிக்சுடனான எனது தொடர்பு ஒருபோதும் இழக்காது. என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு பாதுகாப்பான வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் இந்த விளையாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை, எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.
______________________________________________________________________________
எனக்கு மறுபிறப்பு: சக்கரவர்த்தி
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணிக்குள் திரும்புவது உணர்வுபூர்வமானது. மீண்டும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவதில் மகிழ்ச்சி. இதை மறுபிறப்பு போல உணர்கிறேன். வழக்கமாக நான் கடைபிடிக்கும் அதே செயல்முறையை பின்பற்றுகிறேன். அடுத்து என்ன என்பது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. இந்திய அணியில் வாய்ப்பு பெற உயர்ந்த செயல்திறன் அவசியம். அதுதான் வாய்ப்புக்கான கதவை தட்டும் வழியும் கூட. தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
07 Oct 2024சென்னை : சற்று குறைந்த தங்கம் விலை நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
-
சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Oct 2024சென்னை : சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2024.
07 Oct 2024 -
மெரினா விமான சாகச நிகழ்ச்சி: அரசின் செயலற்றதன்மையால் 5 பேர் உயிரிழந்ததாக இ.பி.எஸ். விமர்சனம்
07 Oct 2024சென்னை : சென்னை, மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
-
சுசீந்திரன் இயக்கும் ’2கே லவ் ஸ்டோரி’.
07 Oct 2024சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி’. இப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயவீர், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
-
மெரினாவில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
07 Oct 2024சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும்.
-
அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட்டோடு பங்கேற்பது ஏற்புடையது இல்லை : உதயநிதிக்கு ஜெயக்குமார் கண்டனம்
07 Oct 2024சென்னை : அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட் போட்டு பங்கேற்பது ஏற்புடையது இல்லை என்று துணை முதல்வர் உதயநிதிக்கு அ.தி.மு.க.
-
நீல நிற சூரியன் – விமர்சனம்
07 Oct 2024ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணாக மாறுபர்களை பெண்ணாக அங்கீகரிப்பதில்லை.
-
விமான சாகச நிகழ்ச்சியில் குறைபாடுகள் இருந்ததா? - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
07 Oct 2024சென்னை : மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
-
செல்ல குட்டி விமர்சனம்
07 Oct 2024கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள்.
-
சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது தமிழக போலீஸ்
07 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் ஏ-2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலைப் பிடிக்க தனிப்படை போலீஸ் துபாய்க்கு விர
-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடகா துணை முதல்வர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
07 Oct 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், குடும்பத்துடன் நேற்று (அக்.7) சுவாமி தரிசனம் செய்தார்.
-
ஏபிசி டாக்கீஸ் - அறிமுகம் செய்த சாக்ஷி அகர்வால்
07 Oct 2024சுயாதீன திரைப் படைப்பாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஏபிசி டாக்கீஸ் ஓ.டி.டி.
-
காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி உதவி
07 Oct 2024வாஷிங்டன் : காசா போருக்காக இதுவரை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ரூ.1.5 லட்சம் கோடி நிதியுதவி அளித்துள்ளது.
-
பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
07 Oct 2024திருவனந்தபுரம் : பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான நடிகர் சித்திக்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
-
இஸ்ரேல் படைகள் தாக்குதல்: லெபனானில் பலியானோர் 4 ஆயிரத்தை தாண்டியது
07 Oct 2024பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் லெபனானில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ஆலன் இசை வெளியீட்டு விழா
07 Oct 20243S பிக்சர்ஸ் சார்பில் ஆர். சிவா தயாரித்து இயக்கி, வெற்றி நாயகனாக நடித்துள்ள படம் ஆலன்.
-
சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு
07 Oct 2024சென்னை : சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2024வாஷிங்டன் : 2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள
-
ஹமாஸ் தாக்குதலின் முதலாண்டு நினைவு: ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
07 Oct 2024டெல் அவிவ் : பாலஸ்தீன பயங்கரவாதிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவினைக் கடைபிடிக்க ஆயிரக்கணக்கா
-
அரசியல் செய்வோருக்கு தோல்விதான் மிஞ்சும்: 5 பேர் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் பேட்டி
07 Oct 2024சென்னை : 'விமான சாகச நிகழச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.
-
மெய்யழகன் வெற்றி விழா
07 Oct 20242டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது..
-
இனியா நடிக்கும் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி
07 Oct 2024Arun Visualz V.M.R.ரமேஷ், R.அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G.