எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாத வகையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு., தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் சுப்ரீம் கோர்ட் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும், சுப்ரீம் கோர்ட் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை > அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதே இல்லை : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
21 Oct 2024மதுரை : நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
மன்னர் சார்லசுக்கு எதிராக ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பெண் எம்.பி..!
21 Oct 2024கேன்பெர்ரா : இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு நேற்று சென்று உரையாற்றினார்.
-
ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனை: தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை
21 Oct 2024சென்னை : ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு
21 Oct 2024சேலம், தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2024.
21 Oct 2024 -
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
21 Oct 2024சென்னை : தமிழகதத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆர்யமாலா விமர்சனம்
21 Oct 2024உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா. இப்படத்தின் கதை 1982-ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
-
காவலர் வீரவணக்க நாள்: காவலர்கள் நினைவு சின்னத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மரியாதை
21 Oct 2024சென்னை, பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்
-
தலா ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசை; 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தது தமிழக அரசு: சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
21 Oct 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார
-
வழக்கு தொடர்பாக கையெழுத்திட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு
21 Oct 2024மதுரை, அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்
-
கனடா - இந்திய அரசியல் உறவுகள் முறிவதற்கு ட்ரூடோ முக்கிய காரணம்: இந்திய தூதர்
21 Oct 2024புதுடில்லி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் கு
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி : நாளை புயலாக வலுவடைகிறது
21 Oct 2024சென்னை : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை புயலாக வலுவடையும் என்றும் அ
-
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற உத்தரவாதம் என்னவானது...? - தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி
21 Oct 2024சென்னை : தமிழகத்தில் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்த உத்தரவாதம் என்னவானது...? என்று தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிளாக் படக்குழு
21 Oct 2024அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் இர்பான்
21 Oct 2024சென்னை : தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்த ஹமாஸ் தலைவர்: யாஹியா சின்வர் குறித்து வெளியான புதிய தகவல்
21 Oct 2024டெல் அவிவ் : ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.
-
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு : மத்திய அமைச்சர் மோகன் நாயுடு தகவல்
21 Oct 2024புதுடெல்லி : விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி மோகன் நாயுடு த
-
ரஷ்யா மற்றும் வடகொரியா கூட்டணியால் அச்சுறுத்தல் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
21 Oct 2024கீவ், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.
-
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது ஒருநாளும் நடக்காது: திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
21 Oct 2024திண்டுக்கல், தி.மு.க.வின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என நத்தத்தில் நேற்று (அக்.21) நடந்த திருமண வ
-
லடாக் பகுதியில் மீண்டும் ரோந்து: இந்தியா-சீனா இடையே உடன்பாடு
21 Oct 2024புதுடெல்லி : கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்
-
ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி: ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் நியமனம் செய்யும் இந்திய ரயில்வே
21 Oct 2024புதுடெல்லி : ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத
-
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. உறுதியோடு தொடர்கிறது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
21 Oct 2024புதுக்கோட்டை : தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. உறுதியோடு தொடர்கிறது என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் உலகின் நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது: பிரதமர்
21 Oct 2024புதுடில்லி, பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது, என பிரதமர் மோடி பெருமி
-
நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிவு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க தடை மேலும் நீட்டிப்பு
21 Oct 2024ஒகேனக்கல், கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் வங்கதேசத்தில் காவலில் இருந்த கைதிகளின் அதிர்ச்சி அனுபவம்
21 Oct 2024டாக்கா : ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் வங்கதேசத்தில் காவலில் இருந்த கைதிகளின் அனுபவம் குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல் அதிர்ச்சி ஏற்பட வைத்துள்ளது.