எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Stalin-a 2024-11-25](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/15/Stalin-a_2024-11-25.gif?itok=BbPlPg8h)
Source: provided
சென்னை: பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்று தான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கேள்வி: தலைவர், முதல்வர். இப்போது அப்பா என்று அழைக்கிறார்களே?
பதில்: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், "தலைவர்" என்று அழைக்கிறார்கள். முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், "முதல்வர்" என்றும் அழைக்கிறார்கள்... இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை "அப்பா" என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால், இந்த "அப்பா" என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது.
கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது... தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?
பதில்: தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை. பெயர்கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு மத்திய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு மத்திய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது; நாமும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம். இதில், நம்முடைய உரிமையைக் கேட்பதையே "அற்பசிந்தனை" என்று மத்திய மந்திரி சொல்கிறார். மத்திய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.
கேள்வி: கல்வி... குறிப்பாகப் பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள். நிறைய திட்டங்களையும் அறிவிக்கிறீர்கள்... இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தைஉணர்ந்திருக்கிறீர்கள்?
பதில்: நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து கல்விக்காக நிறைய செய்து கொண்டு இருக்கிறோம். "கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருவரின் கல்வி அவரின் தலைமுறையையே முன்னேற்றிவிடும்" என்று தொடர்ந்துமாணவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று, நிறைய திட்டங்களைச் செய்கிறோம்.
குறிப்பாகப்பெண்களுக்குக் கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்று ஏராளமான திட்டங்களைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் ஏராளமானவர்கள் பயனடைந்து கொண்டு இருக்கிறார்கள். பயனடைந்த பலர் பேசும் வீடியோக்களை நீங்களேகூட பார்த்திருப்பீர்கள். இந்த திட்டங்களால் முன்னேறியவர்கள், எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள். அதேபோல, நான் கொடுக்கும் பணி நியமன ஆணைகள் பெரும்பாலும் பெண்களுக்கானதாக இருப்பதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். கல்விக்காக இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா?
பதில்: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான். 2019-ல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.
கேள்வி: டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?
பதில்: நான் ஏற்கனவே சொன்னதுதான்... பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான். நாம் "கள்ளக் கூட்டணி" என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான். இதையெல்லாம் பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.
கேள்வி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிறைய செய்திகள் இப்போது வருகிறதே...
பதில்: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டமன்றத்தில் நானே சட்டம் கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம்; விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம். பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், அவர்கள் வீட்டில் இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
கேள்வி: சோஷியல் மீடியா எல்லாம் பார்ப்பீர்களா?
பதில்: ஓய்வு நேரங்களில் பார்ப்பதுண்டு... செய்திகளைவிட மக்களின்'கமெண்ட்ஸ்' என்ன என்று பார்ப்பேன்... தீயவற்றை விலக்கிவிட்டு நல்லதை எடுத்துக் கொள்வேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால்அதைத் தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பேன்.
பொதுவாக, சோஷியல் மீடியாக்களில் நிறைய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன. நிறைய பேர் ஓட்டல்களுக்குச் சென்று, 'புட் ரிவ்யூ' போடுகிறார்கள். இளம் தலைமுறையினர், புட்-க்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே பிட்னசுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கேள்வி: வெளி மாவட்டப் பயணங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்களைப் பற்றி சொல்ல முடியுமா?
பதில்: அரசு நிகழ்ச்சிகளிலும், கழக நிகழ்ச்சிகளிலும் மட்டும் கலந்துகொண்டோமா என்று இந்தப் பயணங்கள் இல்லை. எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும், அந்தப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என்று அனைவரையும் சந்தித்துப் பேசுகிறேன். என்னைச் சந்திக்கும்போது, மக்களின் முகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் என்னிடம் உரிமையோடு பேசுகிறார்கள். "மக்களுக்கான அரசாக உங்கள் அரசு இருக்கிறது" என்று சொல்கிறார்கள். நம்முடைய குறைகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கையுடன் மனுக்களைக் கொடுக்கிறார்கள்.
கூடுமானவரைக்கும் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண்கிறோம். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஏன் அதைசெய்ய முடியவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும், தேவைகளையும் செய்து கொடுக்கிறோம். மொத்தத்தில், இந்த வெளி மாவட்டப் பயணங்கள் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், புதிய எனர்ஜியைத் தருகிறது.
கேள்வி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அறிவித்திருக்கிறார்களே?
பதில்: மிகவும் காலதாமதமான முடிவு இது. அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் அவராகப் பதவி விலகவில்லை. வேறுவழியில்லாமல் பதவி விலகியிருக்கிறார். இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் பற்றி எரிந்தது. 220 பேருக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். மாநிலத்தின் முதல்-மந்திரி மேல் நடவடிக்கை எடுக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.
நடந்த வன்முறையின் பின்னணியில் மாநில முதல்-மந்திரியே சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று, இப்போது அவர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதைப் பற்றிவிசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுமே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள். இந்த நிலையில்தான் வேறு வழியில்லாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருக்கிறார்கள்.
பா.ஜக. ஆளும் மணிப்பூராக இருந்தாலும், உத்தர பிரதேசமாக இருந்தாலும் இந்த அளவில்தான் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் அடுத்த மாநிலத்தைபற்றிக் கூச்சமில்லாமல் பேசுகிறார்கள். நம்மை பொருத்தவரை, மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களைக் காக்கும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது
18 Feb 2025கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
18 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
-
2026 தேர்தலில் த.வெ.க.வுடன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி
18 Feb 2025சென்னை: 2026 தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம்பெறுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
-
பயர் விமர்சனம்
18 Feb 2025நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
-
அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு
18 Feb 2025சென்னை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிரண
-
மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
18 Feb 2025சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களுக்கான மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர
-
திருச்சி, மதுரை டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
18 Feb 2025சென்னை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு
-
உ.பி. பேரவையில் கவர்னரை வெளியேற சொல்லி எதிர்க்கட்சியினர் கடும் அமளி கோ பேக் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு
18 Feb 2025லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
-
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்: முதல்வர் புகழாரம்
18 Feb 2025சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என்று பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
18 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாயகன் நாயகி இல்லாத வித்யாசமான படம் எஸ்.ஏ.சி. பேச்சு
18 Feb 2025எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி.
-
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு
18 Feb 2025சான் ஜோஷி : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
-
சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சி தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்
18 Feb 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பொலிவியாவில் பஸ் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் பலி
18 Feb 2025தென் அமெரிக்க : பொலிவியாவில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம் இன்று பதவியேற்கிறார்
18 Feb 2025புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ள
-
தொழிலும், தொண்டும் வேறு வேறு: எச். ராஜாவுக்கு த.வெ.க. கட்சி பதில்
18 Feb 2025சென்னை: தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பா.ஜ.க.வுக்கு த.வெ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
-
மிரட்டி பணிய வைக்க முடியாது: தமிழ்நாட்டு மக்களை 2-ம் தர மக்களாக மாற்ற பா.ஜ.க. முயற்சி: துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
18 Feb 2025சென்னை, தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம்
18 Feb 2025இரு பெண்களின் காதல் கதைதான் காதல் என்பது பொதுவுடமை படம்.
-
வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்
18 Feb 2025டாக்கா : வங்காளதேசத்துக்கு மீண்டும் வருவேன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.
-
கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்
18 Feb 2025மிசிசாகா: கனடாவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் காயமடைந்தனர்.
-
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
18 Feb 2025புது தில்லி: தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
-
அகரம் பவுண்டேஷன் புதிய அலுவலக திறப்பு விழா
18 Feb 2025சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
மும்மொழி கொள்கைக்கு எதிராக இண்டியா கூட்டணியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
18 Feb 2025சென்னை : மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இண்டியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும்: மைக்கேல் கிளார்க் கணிப்பு
18 Feb 2025சிட்னி : சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் வலியுறுத்தல்
18 Feb 2025பிரான்ஸ் : உக்ரைனில் நீடித்து வரும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.