எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி பங்கேற்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலரை பழனிசாமி வெளியிட, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 77 கிலோ எடை கொண்ட ஜெயலலிதா பிறந்தநாள் கேக்கை, பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டில், தொண்டர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். கட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, மகளிர் ஆரோக்கியத்துக்கான 11 பொருட்கள் அடங்கிய மருத்துவ பெட்டகத்தையும் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மகளிருக்கு வழங்கினார்.
பின்னர் அ.தி.மு.க.வின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணியை தொடங்கி வைத்து, அதில் இணைந்த 2 ஆயிரம் பேருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த அணியின் லட்சிணையையும் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை, சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் விதமாக கட்சியில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. இன்று நாள்தோறும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனை அளிக்கிறது. தவறு செய்பவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.
வேலையே பயிரை மேய்வது போல ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை, கோவை ஆகியவை இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக இருந்தன. ஆனால் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, எஸ்.கோகுல இந்திரா, காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் : அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
24 Feb 2025சென்னை : மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக முதல்வர் இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் குறித்து ஆலோசனை
24 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
-
சூரியன்.ஜி இயக்கும் டெக்ஸ்டர்
24 Feb 2025ராம் எண்டர்டெயினர்ஸ் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER).
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-02-2025
24 Feb 2025 -
அரசு பொதுத் தேர்வை முன்னிட்டு அடுத்த 2 மாதங்கள் மின்தடை இருக்காது: தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு
24 Feb 2025சென்னை, மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
-
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - விமர்சனம்
24 Feb 2025காதலில் தோல்வியடைந்த நாயகன் பவிஷ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். ஆனால், பவிஷ் பிரிந்த காதலியை மீண்டும் பார்க்க செல்கிறார்.
-
கவுதமை பாராட்டிய ஆர்யா
24 Feb 2025லப்பர் பந்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிச்சர்ஸ் S.
-
தென்காசி மாவட்டத்துக்கு 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
24 Feb 2025கன்னியாகுமரி : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறி
-
இரட்டை இயந்திர அரசிலால் ம.பி. வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பு : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Feb 2025போபால் : மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு அமைக்கப்பட்ட பிறகு மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ராமம் ராகவம் விமர்சனம்
24 Feb 2025நேர்மையான அரசு அதிகாரியான சமுத்திரக்கனியின் மகன் தனராஜ் கொரனானி, சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல் ஊர் சுற்றி ஊதாரியாக வளர்கிறான்.
-
தர்மபுரி அருகே பயங்கரம்: பட்டாசுகிடங்கில் தீ விபத்து: 3 பெண்கள் பரிதாபமாக பலி
24 Feb 2025தர்மபுரி : தர்மபுரி அருகே பட்டாசு கிடங்கி பயங்கிர தீ விபத்து ஏற்பட்டது, இதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
-
மாநில எல்லைகளில் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
24 Feb 2025சென்னை, மாநில எல்லையோரங்களில் அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சக
-
அரசு பள்ளிகளுக்கான இணைய கட்டணம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு
24 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்குவதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று முதல்வர் மருந்தகம் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்ட
-
தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டதாக புகார்: டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளி
24 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு உள்ளதாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை
-
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை யாராலும் புகுத்த முடியாது: அமைச்சர்
24 Feb 2025விழுப்புரம் : மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
77-வது பிறந்த நாள் விழா: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2025சென்னை, 77-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.
-
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் திடீர் விலகல்
24 Feb 2025சென்னை : நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகினார்.
-
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர்: இ.பி.எஸ்.
24 Feb 2025சென்னை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க.
-
நிறம் மாறும் உலகில் அம்மாவை பற்றிய படம்
24 Feb 2025சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் தயாராகி, மார்ச் 7 அன்று வெளியாகும் படம் 'நிறம் மாறும் உலகில். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட
-
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுநீரக பிரச்சினையால் போப் பிரான்சிஸ் அவதி
24 Feb 2025ரோம் நகர் : போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல்
24 Feb 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் ச
-
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
24 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையானது.
-
பா. விஜய் இயக்கத்தில் அகத்தியா
24 Feb 2025வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம் அகத்தியா. பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா.
-
அ.தி.மு.க.வின் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
24 Feb 2025சென்னை : அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.