எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கராத்தே பயிற்சியாளர் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே, வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹூசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதல்-மந்திரியும், நடிகருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தற்காப்புக் கலை ஆசிரியரின் மரணம் மனவேதனை அளிக்கிறது. புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் ஷிஹான் (சிகான்) ஹூசைனி காலமானார் என்பதை அறிந்து நான் மனவேதனை அடைந்தேன். நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன். தற்காப்புக் கலை குரு ஹூசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது. சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து... சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டியிருந்தால், நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வேன் என்று கூறினேன். இந்த மாதம் 29ம் தேதி சென்னை சென்று ஹூசைனியைப் பார்க்க முடிவு செய்திருந்தேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னையில், ஹூசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100 சதவீதம் பின்பற்றுவேன். முதலில், அவர் கராத்தே கற்பிக்க ஒப்புக்கொள்ளவில்லை. ''நான் தற்பொழுது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது'' என்று அவர் கூறினார். ஆனால், விடாமுயற்சியாக நான் பலமுறை வேண்டிய பிறகு, அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி, கராத்தேவில் 'பிளாக் பெல்ட்' பெற பயிற்சி பெற்றேன்.
அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும், நான் 'தம்முடு' படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க பெரிதாக உதவியது. ஹூசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் மூவாயிரம் பேர் பிளாக் பெல்ட் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டைப் பிரபலப்படுத்த ஹூசைனி பாடுபட்டார். ஹூசைனியின் திறமைகள், தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முகத் திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்தார். அவர் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினார்.
சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்தச் செல்லும்போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்வார். பன்முகத் திறமை கொண்ட ஹூசைனி, இளைஞர்களுக்கு தற்காப்புக் கலைகளை இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்ய விரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது. ஹூசைனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 day ago |
-
2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Mar 2025சென்னை : 2 நாட்களுககு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார்? - கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Mar 2025புதுடெல்லி : அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
-
தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் யுகாதி திருநாள் நல்வாழ்த்து
29 Mar 2025சென்னை : புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அவர் தவழ்கின்ற குழந்தை: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
29 Mar 2025சென்னை : விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
-
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025கோவை, திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
29 Mar 2025புதுடெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
-
மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அனுமதி
29 Mar 2025வடவள்ளி, மருதமலை கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி முதல் யாகசாலை பூஜை பக்தர்களுக்கு அனுமதி
-
காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
29 Mar 2025உசிலம்பட்டி : உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
-
உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி வாழ்த்து
29 Mar 2025சென்னை : உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகள்ளை தெரிவித்துள்ளனர்.
-
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Mar 2025டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
-
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம்
29 Mar 2025திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
29 Mar 2025சென்னை : முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
29 Mar 2025காபூல் : மியான்மரில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
-
மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
29 Mar 2025கோவில்பட்டி : கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை
29 Mar 2025சென்னை : சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 26 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மியான்மர் நிலநடுக்க உயரிழப்பு எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு
29 Mar 2025பாங்காக், மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
29 Mar 2025பெய்ரூட், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கி உள்ளதாக இஸ்ரேல் தகவல்
-
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
29 Mar 2025வாஷிங்டன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விளையாட்டு வீரருக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இருப்பது சகஜம் : கேப்டன் ரோகித் சர்மா கருத்து
29 Mar 2025மும்பை : வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு என ரோகித் சர்மா தெரிவித
-
டெல்லி நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
29 Mar 2025புதுடெல்லி, டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
-
மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் போராட்டம்; வன்முறை - இருவர் பலி
29 Mar 2025காத்மாண்டு, நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன.
-
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்ப் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது: அதிபர் புதின் திட்டவட்டம்
29 Mar 2025மாஸ்கோ, கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
-
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை
29 Mar 2025பெங்களூரு, சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
-
நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
29 Mar 2025சென்னை : உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025திருச்சி, திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்