எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது.
திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக எதிர்க்கட்சி தரப்பில் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும், இந்த மசோதாவை ஆராய பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அங்கம் வகித்த தங்களது பரிந்துரைகள் கருத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதன் மூலம் சிறுபான்மையின மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். எனினும், அமைச்சர் கிரண் ரிஜிஜூ மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: வக்பு திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, 92.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் குவிந்தன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் மட்டுமல்லாது 284 குழுக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தன். அதன் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. இது முற்றிலும் சொத்துகளை கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது பற்றிய விஷயம் ஆகும். குறிப்பாக, இப்போது உள்ள சட்டத்தின் 40-வது பிரிவின்படி எந்த ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் அறிவிக்க முடியும். இந்த கடுமையான பிரிவு நீக்கப்படுகிறது. அதேநேரம் மசூதி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பேசும்போது, “அரசியல் சாசனத்தை நீர்த்து போகச் செய்வதும், சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறித்து அவர்களை இழிவுபடுத்துவதும், இந்திய சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம். பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வின் போது, எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்றார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சொத்து வக்பு வசமானது. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்குதான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் விடிய விடிய நடந்த விவாதத்துக்கு பிறகு மக்களவையில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தொடர் விடுமுறை எதிரொலி: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
10 Apr 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
-
மாவோயிஸ்ட் நடமாட்டம்..? 3 மாநில எல்லையில் ரோந்து பணி தீவிரம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின் அடுத்து ரோந்து பணி தீவிரமாக உள்ளது.
-
யேமன் நாட்டு தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு
10 Apr 2025யேமன்: சனாவின் மக்கள் குடியிருப்பு நிரம்பிய அல்-நஹ்தாயின் பகுதியின் மீது அமெரிக்க நேற்றுமுன்தினம் நள்ளிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
-
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
10 Apr 2025புதுச்சேரி: பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்
10 Apr 2025டெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
-
போப் பிரான்சிசை சந்தித்து நலம் விசாரித்த இங்கி. மன்னர் சார்லஸ்
10 Apr 2025ரோம்: போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் திடீரென சந்தித்தனர்
-
ஐ.பி.எல். தொடரில் தொடரும் சாய் சுதர்சனின் பல சாதனைகள்
10 Apr 2025அகமதாபாத்: ஐ.பி.எல். தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
தமிழக வீரர்...
-
கோடை கால மின் தேவை:கூடுதல் மின்சாரம் கொள்முதல்
10 Apr 2025மதுரை: கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சச்சினுக்கு பிறகு அதிசய வீரர்:பிரியன்ஷ் ஆர்யாவுக்கு சித்து பாராட்டு
10 Apr 2025மும்பை: சச்சினுக்கு பிறகு, அவர் ஒரு அதிசய திறமை கொண்ட வீரர் என்று பிரியன்ஷ் ஆர்யா வுக்கு சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்து: பலி 113 ஆக உயர்வு
10 Apr 2025சாண்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்தில் மாகாண கவர்னர் மரணம் பலி எண்ணிக்கை 113 உயர்ந்துள்ளது.
-
மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம்
10 Apr 2025சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-04-2025
11 Apr 2025 -
ஹசரங்கா இல்லாதது இழப்பு:முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து
10 Apr 2025அகமதாபாத்: சுழல் பந்துவீச்சாளர் ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
-
கோவில் திருவிழாக்களில் சாதி பெயர்:அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு ஐகோர்ட்டு கிளை இடைக்கால தடை
10 Apr 2025மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோவிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டு
-
தொடர் தோல்வி எதிரொலி: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சென்னை அணிக்கு மேலும் சிக்கல்?
10 Apr 2025சென்னை: தொடர் தோல்வி காரணமாக ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் சி.எஸ்.கே. அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தொடர் தோல்வி...
-
ஆந்திராவின் பிரபல கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு
10 Apr 2025அமராவதி: ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தின் பெனுகொண்டா மண்டலம் யர்ராமஞ்சி பகுதியில் பிரபல கியா கார் தொழிற்சாலை உள்ளது.
-
விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
10 Apr 2025சென்னை: விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: தமிழக உயர்கல்வித்துறை விசாரணை
10 Apr 2025நெல்லை: மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையொட்டி உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது.
-
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
10 Apr 2025சென்னை: அமித்ஷா வருகையை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி மத்திய பிரதேசம் பயணம்
10 Apr 2025போபால்: பல்வேறு நிகழ் சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார்.
-
மெதுவான பந்துவீச்சு: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
10 Apr 2025அகமதாபாத்: மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அசத்தல்
10 Apr 2025அகமதாபாத்: சாய் சுதா்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம் ஆட்டத்தால் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அசத்தல் வெற்றி பெற்றது.
-
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தவரால் அதிர்ச்சி
10 Apr 2025புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது.
-
சினிமா வேறு - அரசியல் வேறு: விஜய் குறித்து அமைச்சர் காந்தி
10 Apr 2025சென்னை: நீட் விலக்குச் சட்ட மசோதா தொடர்பான விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் காந்தி பதிலளித்துள்ளார்.