எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, தமிழக சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
விதிகளில் இல்லாத...
தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளில் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன.இதுவரை இருந்திராத அளவுக்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது. தேர்வுகள் காலதாமதமாகத் தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தக் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, இவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில்...
பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள்.தேர்வு மையத்தில் தேர்வு மைய கண்காணிப்பாளரே, விடைத்தாள்களை நிரப்பிய ஊழல் புரிந்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள், பல ஆண்டு காலம் உழைத்து, பெரும் செலவழித்து இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாரான மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்து தவறே நடைபெறவில்லை என்று கூறிய மத்திய அரசு, பின்பு சுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய பின்னரே, இந்த தேர்வை நடத்தும் என்டிஏ அமைப்பின் தலைவரையே மாற்றியுள்ளது. தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுகளே...
பல ஆண்டுகாலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகமும், தமிழக மக்களும் தனியே போர்த் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலங்களை உணர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழகத்தின் குரல், இந்தியாவின் குரலாக எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார்.
ரத்து செய்யக்கோரி...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெற நாம் எடுத்த முயற்சிகள் வெற்றியடைய செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடவும், தேவையான முன்னெடுப்பாகவே, இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வரின் தீர்மானம்:
கிராமப்புற ஏழையெளிய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்புக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையில் மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும். தொடர்ந்து, பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்த நீட் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையிலும் தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணை சட்டத்தில் தேவைப்படும் திரு்த்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என தெரிவித்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 1 min ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 1 day ago |
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்
29 Sep 2024பெய்ரூட் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முன்தினம் (செப்.
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
29 Sep 2024விருதுநகர் : வெம்பக்கோட்டை அகழாய்வில் 17-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென்னிந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
-
சுனிதா வில்லியம்ஸை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்
29 Sep 2024வாஷிங்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லா தலைவர் மரணம்: இஸ்ரேலுக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம்
29 Sep 2024ஸ்ரீநகர் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து பட்காம் மற்றும் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
-
ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு
29 Sep 2024நியூயார்க் : ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
-
மான் கீ பாத் நிகழ்ச்சி: மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
29 Sep 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.
-
விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29 Sep 2024திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2718 கனஅடியாக அதிகரிப்பு
29 Sep 2024சேலம் : மேட்டூர் அணை நீர்வரத்து 2718 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் : உதயநிதி ஸ்டாலின் பேட்டி
29 Sep 2024சென்னை : என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
வக்பு வாரிய சட்டம்: இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்து கேட்காமல் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு : எடப்பாடி கண்டனம்
29 Sep 2024சென்னை : அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வாய்ப்பளிக்காத தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க.
-
பாகிஸ்தானின் நிலைக்கு அதன் கர்மா தான் காரணம் : ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் தாக்கு
29 Sep 2024நியூயார்க் : பாகிஸ்தானின் பொருளாதார நிலையின்மையினால் ஏற்பட்ட வறுமை நிலைக்கு அதன் கர்மாதான் காரணம் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு
29 Sep 2024ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை முதல்வர், அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Sep 2024சென்னை : புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை முதல்வர், அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் அனைவரும் செயல
-
காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் திடீரென மயக்கமடைந்த கார்கே : தாங்கி பிடித்த நிர்வாகிகள்
29 Sep 2024ஜம்மு : காஷ்மீரில் பிரச்சாரத்தின்போது மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென மயக்கம் அடைந்தார்.
-
உதயநிதி துணை முதல்வராவதால் முன்னேற்றம் ஏதும் வரப்போவதில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
29 Sep 2024சென்னை : சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தூய்மை சேவை எனும் இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
-
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அ
-
முடங்கிய திட்டப்பணிகள்: டெல்லி முதல்வர் அதிஷி அமைச்சர்களுடன் ஆலோசனை
29 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து மாநில அமைச்சர்களுடன் முதல்வர் அதிஷி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
-
தி.மு.க. கூட்டணி முன்பைவிட இப்போது வலுவாக உள்ளது : மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
29 Sep 2024மதுரை : தி.மு.க. கூட்டணி இப்போது முன்பைவிட வலுவாக உள்ளது என்று மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
பிரகாஷ் காரத் மார்க்சிய கம்யூ. ஒருங்கிணைப்பாளராக நியமனம்
29 Sep 2024புதுடெல்லி : மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி காலமானதை அடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் குழு மற்றும்
-
செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
29 Sep 2024சென்னை : தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர்.
-
ஹிஸ்புல்லா இயக்கத்தின் அடுத்த தலைவராகிறார் ஹஷேம் சபிதீன்
29 Sep 2024பெய்ரூட் : லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவர
-
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Sep 2024சென்னை : தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.