எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின், சென்னை லயோலா கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், இன்பன், தன்மயா பிள்ளைகளும் உள்ளனர்.
விஜய், திரிஷா நடித்த குருவி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை விநியோகஸ்தராக கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, கோ, டான், விக்ரம் ஆகிய படங்களை வெளியிட்டார். திரையில், 2009-ம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.விற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
2019-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். திரைத்துறையிலும், அரசியலிலும் தீவிரமாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின், 2023-ம் ஆண்டு வெளிவந்த மாமன்னன் படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் பணியாற்றி வருகிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியலில் உச்சத்துக்கே சென்றார் உதயநிதி ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் வலுக்க ஆரம்பித்தது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதல்வரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
அதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2009-ம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் தமிழக துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 hours ago |
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்
29 Sep 2024பெய்ரூட் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முன்தினம் (செப்.
-
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை முதல்வர், அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Sep 2024சென்னை : புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை முதல்வர், அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் அனைவரும் செயல
-
பிரகாஷ் காரத் மார்க்சிய கம்யூ. ஒருங்கிணைப்பாளராக நியமனம்
29 Sep 2024புதுடெல்லி : மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி காலமானதை அடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் குழு மற்றும்
-
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
29 Sep 2024சென்னை : மக்களும், திமுகவினரும் எதிர்பார்த்ததை முதல் அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
-
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Sep 2024சென்னை : தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் விமானப்படை புதிய தலைமை தளபதியாக இன்று பதவியேற்பு
29 Sep 2024புதுடெல்லி : விமானப் படை புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று (செப். 30) பதவியேற்கவுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2024.
30 Sep 2024 -
பொய் சொல்பவரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : ஜம்மு பிரசாரத்தில் கார்கே ஆவேசம்
29 Sep 2024ஜம்மு : பொய் சொல்பவரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஜம்மு பிரசாரத்தில் மல்லிகார்ஜூன கார்கே ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
-
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
29 Sep 2024சென்னை : அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நவம்பரில் வெளியாகும் கிளாடியேட்டர்-2
30 Sep 2024வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ .
-
மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு
30 Sep 2024டோக்கியோ : இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
லெபனானில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 105 பேர் பலி
30 Sep 2024பெய்ரூட் : லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
-
டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடம்பிடித்தார் ஜுக்கர்பெர்க் : முதலிடத்தில் எலான்மஸ்க்
30 Sep 2024நியூயார்க் : உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : பிரதமர் மோடி வாழ்த்து
30 Sep 2024புதுடெல்லி : பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்களுக்கு இலங்கை அரசு உத்தரவு
30 Sep 2024கொழும்பு : கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க முன்னாள் எம்.பி.க்கள் 100 பேருக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
காவிரிப் பிரச்சினையில் அரசியல் கலக்காதீர்கள்: மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கருத்து
30 Sep 2024திருச்சி, காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத் துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்: பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
30 Sep 2024ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
-
பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை
30 Sep 2024புது டெல்லி, பிரபல மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்கியும், கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்: டிரம்ப்
30 Sep 2024வாஷிங்டன் : ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
பிரதமர் மோடி குறித்த கருத்து வெறுக்கத்தக்கது : கார்கேவுக்கு அமித்ஷா கண்டனம்
30 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து முற்றிலும் வெறுக்கத்தக்கது, அவமானகரமானது என்று பா.ஜ.க.
-
கலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு
30 Sep 2024திருப்பதி : கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
-
ரபேல் கொள்முதல் குறித்து பேச்சு: பிரான்ஸ் சென்றார் அஜித் தோவல்
30 Sep 2024புது டெல்லி, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். &nb
-
பாராட்டு மழையில் லப்பர் பந்து படக்குழு
30 Sep 2024பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் லப்பர் பந்து.