எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ரூ. 38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதன் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழக அமைச்சரவைக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ. 38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழகத்தில் ரூ.38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இம்முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், போன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரி பாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ. 9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசாண் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ. 13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14,000 நபர்கள்), தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பி.எஸ்.ஜி. குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்), அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 15,000 நபர்கள்),
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1395 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1033 நபர்கள்), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நியூசிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
07 Oct 2024வெல்லிங்டன் : 9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் ரூ. 25 கோடி மதிப்பிலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு
07 Oct 2024சென்னை : சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
07 Oct 2024மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது.
-
அதிரடி அணுகுமுறை: ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர் புகழாரம்
07 Oct 2024மும்பை : ரோகித் சர்மாவின் அதிரடி அணுகுமுறைக்கு கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2024சென்னை : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலியின் சாதனை முறியடிப்பு
07 Oct 2024குவாலியர் : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா முறியடித்துள்ளார்.
-
சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
07 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று முன்தினம் (அக்.6) ஒரேநாளில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஈரோட்டில் சாலை விபத்தில் நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர்கள் 2 பேர் பலி
07 Oct 2024ஈரோடு : ஈரோட்டில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு நிகழ்ச்சி பெண்தொகுப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
பழனி கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்
07 Oct 2024பழனி : பழனி மலைக் கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி (ரோப்கார்) சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று முதல் (அக்.
-
சம்பயி சோரனின் உடல்நிலை குறித்து விசாரித்தார் பிரதமர்
07 Oct 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்
-
ரிச்சா கோஷுக்கு விருது
07 Oct 2024மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
-
பட்டியலினத்தவரின் வீட்டில்... ராகுலின் வீடியோ வைரல்
07 Oct 2024மும்பை : பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார்.
-
ஐ.சி.சி. செப்டம்பர் மாத விருது: வீரர், வீராங்கனை பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
07 Oct 2024துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2024.
08 Oct 2024 -
இலங்கை அணயின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்
07 Oct 2024கொழும்பு : 2026 டி20 உலகக் கோப்பை வரை சனத் ஜெயசூர்யா பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக நியமனம்...
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்
07 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது சஞ்சய் ராய்தான் என குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) தாக்கல் செய்த குற்றப்பத்திரி
-
மேற்கு வங்காளத்தில் பயங்கரம்: நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
07 Oct 2024கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
08 Oct 2024சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்: டிரம்ப்
08 Oct 2024வாஷிங்டன் : நான் பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: இஸ்புல்லாவின் முக்கிய தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழப்பு
08 Oct 2024ஜெருசலேம் : பெய்ரூட்டில் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
நாளை லாவோஸ் நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் மோடி
08 Oct 2024புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக லாவோஸ் செல்கிறார்.
-
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: அமெரிக்காவுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்த வடகொரியா
08 Oct 2024பியோங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்
-
கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு : மாலத்தீவு அதிபர் புகழாரம்
08 Oct 2024லக்னோ : காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.
-
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் பலி
08 Oct 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7
-
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ., பாடம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்
08 Oct 2024புதுடெல்லி : ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்பட