எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பழைய பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டது.
இதற்கிடையே, பாம்பன் ரெயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் 'தூக்கு பாலத்தில்' அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர், பழைய பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு (2.1 கிலோ மீட்டர் தூரம்) கட்டப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி புதிய ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஒருசில குறைகளை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு கமிஷனர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டது.
இதையடுத்து, புதிய ரெயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை.
ரெயில்வே பாலப் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறந்துவைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக, பாம்பன் புதிய ரெயில்வே பாலம் மத்திய அரசின் கனவு திட்டம் என்பதால் அதை பிரதமர் மோடி மட்டுமே திறந்து வைப்பார் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். கடந்த 23-ம் தேதி தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், ரெயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.
இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 8 hours ago |
-
2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Mar 2025சென்னை : 2 நாட்களுககு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் யுகாதி திருநாள் நல்வாழ்த்து
29 Mar 2025சென்னை : புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
29 Mar 2025கோவில்பட்டி : கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025கோவை, திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-
காவலர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்ட நபர் என்கவுன்ட்டர்
29 Mar 2025உசிலம்பட்டி : உசிலம்பட்டி காவலர் படுகொலை வழக்கில் குற்றவாளி பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
-
உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி வாழ்த்து
29 Mar 2025சென்னை : உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகள்ளை தெரிவித்துள்ளனர்.
-
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம்
29 Mar 2025திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
டெல்லி நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
29 Mar 2025புதுடெல்லி, டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
-
அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார்? - கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Mar 2025புதுடெல்லி : அடுத்த தமிழ்நாடு முதல்வர் யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
29 Mar 2025பெய்ரூட், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கி உள்ளதாக இஸ்ரேல் தகவல்
-
மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் போராட்டம்; வன்முறை - இருவர் பலி
29 Mar 2025காத்மாண்டு, நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
29 Mar 2025காபூல் : மியான்மரில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது
-
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
29 Mar 2025வாஷிங்டன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை
29 Mar 2025பெங்களூரு, சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
29 Mar 2025புதுடெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
-
அவர் தவழ்கின்ற குழந்தை: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
29 Mar 2025சென்னை : விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
-
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Mar 2025டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
-
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025திருச்சி, திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
-
மியான்மர் நிலநடுக்க உயரிழப்பு எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு
29 Mar 2025பாங்காக், மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
துணை முதல்வர் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி: பெண் கைது
29 Mar 2025சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்து மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
-
சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
29 Mar 2025சென்னை : முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
29 Mar 2025சென்னை : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
29 Mar 2025சென்னை : உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மணிப்பூரில் நிலநடுக்கம்
29 Mar 2025இம்பால் : மணிப்பூரில் நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்ப் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது: அதிபர் புதின் திட்டவட்டம்
29 Mar 2025மாஸ்கோ, கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.