எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை சார்பில் 93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பல மடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 45 கோடியே 39 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டம் - அவலூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் செஞ்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டப்பட்டுள்ள 7500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, இயந்திரங்களுடன் கூடிய தரம்பிரிப்பு மற்றும் மதிப்பீட்டு கூடம், ஏலக்கூடம், விவசாயிகள் ஓய்வு அறை, வியாபாரிகள் ஓய்வு அறை, பரிவர்த்தனைக் கூடம் மற்றும் எடைமேடை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை, கிள்ளிக்குளம், ஈச்சங்கோட்டை மற்றும் குடிமியான்மலை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கங்கள், அலுவலகக் கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், பயிற்சியாளர்கள் விடுதியுடன் கூடிய பயிற்சியாளர் அரங்கங்கள்,
வேளாண்மைத் துறை சார்பில் 9 கோடியே 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் - காவேரிப்பட்டிணம் மற்றும் சூளகிரி, திருநெல்வேலி மாவட்டம் - இராதாபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், தஞ்சாவூர் மாவட்டம் - ஆடுதுறை, தேனி மாவட்டம் - வைகை அணை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 2 பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள், தஞ்சாவூர் மாவட்டம் - ஆடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி மாவட்டம் - சின்னசேலம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 மண் ஆய்வுக்கூடங்கள், சென்னை, சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் ஒரு கோடியே 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்ட கூட்டரங்கம்,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவிகளுக்காக 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டிடம், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம், வெப்ப மண்டல பழப்பயிர்களான மா, எலுமிச்சை, கொய்யா, பலா, பப்பாளி மற்றும் இதர பழப் பயிர்களின் சாகுபடியினை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வெப்ப மண்டல பழப் பயிர்களுக்கான மகத்துவ மையம்,
மலைக்காய்கறி பயிர்களான காரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், அவரை வகைகள் போன்ற பயிர்களின் சாகுபடியினை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மலைக்காய்கறி பயிர்களுக்கான மகத்துவ மையம், கிராமப்புற சந்தை வளாகம், தோட்டக்கலை விளைப்பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களை சென்றடையும் நோக்கத்துடன் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் 96 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிராமப்புற சந்தை வளாகம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவும், இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் இன்னல்களை தடுக்கும் வகையிலும், நுகர்வோர்களுக்கு தேவையான தரமான பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை ந¨யாயமான விலையில் கிடைக்கச் செய்திடும் பொருட்டும், கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர், தடாகம் சாலை மற்றும் சென்னை மாவட்டம் - தேனாம்பேட்டை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா ஆகிய இடங்களில் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 தோட்டக்கலை விற்பனை ந¨லையங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையக் கட்டிடம் என மொத்தம் 93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், வேளாண்மை இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 34 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ந.சுப்பையன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குநர் முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 days 18 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 1 day ago |
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
29 Sep 2024விருதுநகர் : வெம்பக்கோட்டை அகழாய்வில் 17-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென்னிந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
-
சுனிதா வில்லியம்ஸை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்
29 Sep 2024வாஷிங்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்
-
ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு
29 Sep 2024நியூயார்க் : ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லா தலைவர் மரணம்: இஸ்ரேலுக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம்
29 Sep 2024ஸ்ரீநகர் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து பட்காம் மற்றும் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
-
மான் கீ பாத் நிகழ்ச்சி: மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
29 Sep 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29 Sep 2024திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
உதயநிதி துணை முதல்வராவதால் முன்னேற்றம் ஏதும் வரப்போவதில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
29 Sep 2024சென்னை : சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தூய்மை சேவை எனும் இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
-
காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் திடீரென மயக்கமடைந்த கார்கே : தாங்கி பிடித்த நிர்வாகிகள்
29 Sep 2024ஜம்மு : காஷ்மீரில் பிரச்சாரத்தின்போது மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென மயக்கம் அடைந்தார்.
-
முடங்கிய திட்டப்பணிகள்: டெல்லி முதல்வர் அதிஷி அமைச்சர்களுடன் ஆலோசனை
29 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து மாநில அமைச்சர்களுடன் முதல்வர் அதிஷி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு
29 Sep 2024ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்
29 Sep 2024பெய்ரூட் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முன்தினம் (செப்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2718 கனஅடியாக அதிகரிப்பு
29 Sep 2024சேலம் : மேட்டூர் அணை நீர்வரத்து 2718 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் : உதயநிதி ஸ்டாலின் பேட்டி
29 Sep 2024சென்னை : என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பாகிஸ்தானின் நிலைக்கு அதன் கர்மா தான் காரணம் : ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் தாக்கு
29 Sep 2024நியூயார்க் : பாகிஸ்தானின் பொருளாதார நிலையின்மையினால் ஏற்பட்ட வறுமை நிலைக்கு அதன் கர்மாதான் காரணம் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
பிரகாஷ் காரத் மார்க்சிய கம்யூ. ஒருங்கிணைப்பாளராக நியமனம்
29 Sep 2024புதுடெல்லி : மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி காலமானதை அடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் குழு மற்றும்
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல்
29 Sep 2024தென்காசி, : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
-
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அ
-
ஹிஸ்புல்லா தலைவர் கொலை: இஸ்ரேலுக்கு ஜோபைடன் ஆதரவு
29 Sep 2024வாஷிங்டன் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க அதிபர் பைடன் கருத்
-
தி.மு.க. கூட்டணி முன்பைவிட இப்போது வலுவாக உள்ளது : மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
29 Sep 2024மதுரை : தி.மு.க. கூட்டணி இப்போது முன்பைவிட வலுவாக உள்ளது என்று மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கை உடல் உறுப்புகளை வடிவமைத்த இந்தியர்கள்
29 Sep 2024கீவ் : ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த உக்ரைன் வாசிகளுக்கு செயற்கை உடல் உறுப்புக்களை வடிவமைத்துக் கொடுத்ததில் 2 இந்தியர்கள் முக்கிய
-
ஹிஸ்புல்லா இயக்கத்தின் அடுத்த தலைவராகிறார் ஹஷேம் சபிதீன்
29 Sep 2024பெய்ரூட் : லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவர