முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பயங்கரம்: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 பேர் படுகாயம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      இந்தியா
Andhra 2024-07-08

Source: provided

திருமலை : ஆந்திராவில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 

ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள ஜக்கையா பேட்டையில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் பாய்லர் அருகே பணி செய்து கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாய்லர் வெடி விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து