எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார். எனவே புதிய திட்டத்துடன் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் இந்தியா உட்பட எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"அந்தத் தொடரில் (பாகிஸ்தான் தொடர்) கிடைத்த வெற்றியால் எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். அந்த வெற்றியால் எங்கள் அணியின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். எனவே நாங்கள் புதிய திட்டத்துடன் வருவது அவசியம். அங்கே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் எங்களால் நல்ல முடிவுகளை சாதிக்க முடியும். ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறுவதற்காகவே விளையாட வேண்டும் என்ற அணுகு முறையை நாங்கள் கையாள்கிறோம். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டை பாகிஸ்தான் தொடரை வென்று நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே இப்படியே தொடர்ந்து விளையாடினால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
___________________________________________________________________________
இந்திய அணியில் இல்லை: சேவாக்
ஐபிஎல் போன்ற டி20 தொடர்களும் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததுமே இதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கே அதிகமான வெள்ளைப்பந்து போட்டிகள் நடைபெறுவதும் குறைவான ஸ்பின்னர்கள் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்திய வீரர்கள் குறைவான உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது மற்றொரு காரணமாகும்.
சர்வதேசத்தை விட உள்ளூரில் நீங்கள் அதிக ஸ்பின்னர்களை எதிர்கொள்வீர்கள். எங்கள் காலத்தில் டிராவிட், சச்சின், கங்குலி,லட்சுமன், யுவராஜ் போன்ற அனைவரும் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவோம். அதனால் நாங்கள் ஸ்பின்னர்களை அதிகமாக எதிர்கொண்டு விளையாடுவோம். ஆனால் அட்டவணை பிசியாக இருப்பதால் வீரர்களுக்கு குறைந்த நேரமே கிடைக்கிறது. நிறைய லீக் தொடர்கள் நடைபெறுவதால் ஸ்பின்னர்கள் தங்களுடைய திறனை முன்னேற்றுவதில்லை" என்று கூறினார்.
___________________________________________________________________________
ஆஸ்திரேலிய வீரர் சவால்
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியா சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சு துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே தெரிவித்துள்ளார். அதனாலயே தங்களுடைய சொந்த மண்ணில் கூட அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு., இந்த 2 அணிகள் ஒன்றாக விளையாடும்போது எப்போதுமே எனர்ஜி உச்சமாக இருக்கும். அந்த அணிகள் மோதும் போட்டிகள் இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து உட்பட எங்கு நடைபெற்றாலும் அதற்கு எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவே அவர்களை ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் முன்னிலைப்படுத்துகிறது. அதனாலேயே ஆஸ்திரேலியாவில் அவர்களை வீழ்த்துவது கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த கோடைகாலத்தில் நாங்கள் அவர்களை உண்மையான அழுத்தத்தின் கீழ் தள்ளி வெல்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.
___________________________________________________________________________
குறைத்து மதிப்பிடக்கூடாது: பண்ட்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆசிய நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற அணிகள் ஆசியாவில் நன்றாக விளையாடும் அணிகள் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கு இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகள், சூழ்நிலைகள் நன்கு பழக்கப்பட்டிருக்கும். இந்திய அணி அதன் திறமைகளை வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். எப்படி நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
எதிரணி யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் 100 சதவீதம் உழைப்பை கொடுத்து விளையாட வேண்டும். சர்வதேச தொடர்களில் அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எந்த ஒரு தொடரையும் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விக்கான இடைவெளி மிகவும் குறைந்து விட்டது. அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
___________________________________________________________________________
நியூசி., அணிக்கு பயறிச்சியாளர்
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்காக நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த 2 டெஸ்ட் தொடர்களுக்கும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்தின் துணை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 5 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 1 day ago |
-
வரும் பிப்ரவரிக்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும்: வைத்திலிங்கம்
15 Sep 2024தஞ்சாவூர் : வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அ.தி.மு.க. கண்டிப்பாக ஒன்றிணையும் என்று வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
15 Sep 2024சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக்கப்பட்டிரு
-
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்
15 Sep 2024சென்னை : உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அன
-
ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
15 Sep 2024சென்னை : கேரள மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க.
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
15 Sep 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் அதிகரித்து காணப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவன் போக மாட்டார் : குமரியில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
15 Sep 2024குமரி : தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவன் போக மாட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
ஓணம் பண்டிகை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
15 Sep 2024புதுடெல்லி : ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சீதாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
15 Sep 2024புதுடெல்லி : சீதாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
-
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்: எடப்பாடி டுவிட்டரில் புகழாரம்
15 Sep 2024சென்னை : முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் நேற்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது.
-
தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி விரைவில் அறிவிப்பு
15 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
-
அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள தி.மு.க. பவள விழா இலட்சினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Sep 2024சென்னை : சென்னை அண்ணா அறிவாலயம் கட்டிடத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ள தி.மு.க. பவள விழா இலட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 64 விவசாயிகள் 64 பலி
15 Sep 2024லாகோஸ் : நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் விவசாயிகள் 64 பேர் பலியாகினர்.
-
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
15 Sep 2024பாரிஸ் : பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
-
இன்று 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2024சென்னை : தமிழத்தில் இன்று 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை
-
தனியார் விண்வெளி பயணம் நிறைவு: பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம்
15 Sep 2024வாஷிங்டன் : தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நேற்று பூமிக்கு திரும்பியுள்ளது.
-
இந்தி மொழியில் மருத்துவ படிப்பு கற்றுத் தரப்படும் : சத்தீஸ்கர் முதல்வர் தகவல்
15 Sep 2024ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தி மொழியில் மருத்துவப் படிப்பான எம்.பி.பி.எஸ்., கற்றுத்தரப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறி உள்ளார்.
-
வங்கதேசம், ரோஹிங்கியாக்களின் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தல்: பிரதமர் மோடி பேச்சு
15 Sep 2024ராஞ்சி : வங்கதேசம்,ரோஹிங்கியாக்களின் ஊடுருவலால் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து 2 நாளில் விலகுகிறேன் : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
15 Sep 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் பதவியில் 2 நாளில் விலகவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
-
டைமண்ட் லீக் இறுதி சுற்று: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி
15 Sep 2024பிரஸ்சல்ஸ் : டைமண்ட் லீக் இறுதி சுற்றில் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியது இலங்கை: அக். முதல் அமல்
15 Sep 2024கொழும்பு : வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசு அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீரங்கத்தில் வரும் 20-ம் தேதி நெல் அளவைத் திருநாள்
15 Sep 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆவணி மாத நெல் அளவை திருநாள் வரும் 20-ம் தேதி நடக்கிறது.
-
வீடுகள் தோறும் அத்தப்பூ கோலம்: கேரளாவில் களைகட்டியது ஓணம் கொண்டாட்டம்
15 Sep 2024திருவனந்தபுரம் : கேரளாவில் ஓணம் பண்டிகையின் 10-வது நாளான நேற்று சிகர நிகழ்வான திருவோண கொண்டாட்டம் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை களைகட்டி காணப்பட்டது.&
-
ஐதராபாத்தில் போக்குவரத்தை சீரமைக்க திருநங்கைகள் படை
15 Sep 2024திருப்பதி : ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்டில் 6 வந்தே பாரத் புதிய ரெயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
15 Sep 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராஞ்சியில் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளூரில் நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் : 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
15 Sep 2024சென்னை : திருவள்ளூரில் நடைபெற இருந்த அ.தி.மு.க .பொதுக்கூட்டம் வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.