எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமுற்றனர். காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது.
முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் அதன்பிறகு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றனர்.
மேலும், சில பகுதிகளில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிகிறது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பத்னோட்டாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நமது வீரம் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை இழந்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மேலும் எங்கள் வீரர்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.6 days 12 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 2 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.1 week 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2024
06 Sep 2024 -
தமிழகத்தில் பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
06 Sep 2024சென்னை : அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறை
-
இன்று விநாயகர் சதுர்த்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
06 Sep 2024சென்னை, விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வரும் 14-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 தேர்வு நடைபெறுகிறது : வழிகாட்டுதல்கள் வெளியீடு
06 Sep 2024சென்னை : குரூப் 2 தேர்வு எழுத வரும் தேர்வர்களை அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் டேபிளில் உள்ள பதிவெண்ணுடன் வீடியோகிராபர் வீடியோ எடுப்பார் என்றும், முகம் மற்றும் பதிவு எண
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
06 Sep 2024சென்னை : தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து
06 Sep 2024சென்னை, எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டுவிட்டர் பக
-
லிங்கன் எலக்ட்ரிக் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் சென்னை, கோவை, காஞ்சியில் ரூ.850 கோடி தொழில் முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
06 Sep 2024சென்னை, லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.
-
பிரான்சில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை
06 Sep 2024பாரீஸ், 11 முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
-
அருப்புக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகா இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் எடப்பாடியார்
06 Sep 2024அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகா இல்ல திருமண வரவேற்பு விழாவில் அ.தி.மு.க.
-
நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
06 Sep 2024சென்னை, விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டிரம்புக்கு தான் ஓட்டு போடுவேன்: ஒபாமாவின் சகோதரர் திட்டவட்டம்
06 Sep 2024வாஷிங்டன், ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு ஓட்டளிப்பதாக கூறியுள்ளார்.
-
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 6-வது தங்கப்பதக்கம்
06 Sep 2024பாரிஸ் : பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
அரசு பள்ளியில் சர்ச்சைப் பேச்சு: அனைவருக்கும் பாடமாக இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
06 Sep 2024சென்னை : சென்னையில் அரசு பள்ளி கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான
-
வரி ஏய்ப்பு விவகாரம்: குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோபைடன் மகன்
06 Sep 2024வாஷிங்டன், ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2024
06 Sep 2024 -
சீரமைப்பு பணி: திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து
06 Sep 2024நெல்லை, சீரமைப்பு பணி காரணமாக வரும் 9-ம் தேதி முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இருமார்க்கங்களிலும் திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படு
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி மாஜி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
06 Sep 2024கொல்கத்தா : கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி
06 Sep 2024சென்னை : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
-
கென்யாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் பலி
06 Sep 2024நைரோபி, கென்யாவின் நெய்ரி மாகாணத்தில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா: வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி இன்று நடக்கிறது
06 Sep 2024நாகை, வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று நடக்கிறது.
-
காவல் துறையின் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டோம்: மாநாடு தேதியை விரைவில் விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த் தகவல்
06 Sep 2024விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள த.வெ.க. மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளியில் அனுமதியின்றி தனியார் நிகழ்ச்சி: சென்னை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்
06 Sep 2024சென்னை, பள்ளியில் அனுமதியின்றி தனியார் நிகழ்ச்சி நடத்தியதாக சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள
-
செப். 16-க்கு பதில் 17-ம் தேதி மீலாது நபி கொண்டாட்டம் : தலைமை காஜி அறிவிப்பு
06 Sep 2024சென்னை : மீலாது நபி பண்டிகை வரும் 16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
06 Sep 2024சென்னை : தி.மு.க.
-
அடுத்த வாரம் காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி: 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
06 Sep 2024ஜம்மு, சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.