எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டம் 'பாரதிய வாயு சேனா' என்ற தலைப்பில் சென்னையில் வருகிற 8-ந்தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நடக்கிறது. இதனை முன்னிட்டு, வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
இதனையொட்டி விமான சாகச நிகழ்ச்சியின் முதல் ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எம்.ஐ.-70 ரக 2 ஹெலிகாப்டர்கள் கடற்கரையில் புழுதியை கிளப்பியப்படி பறந்தன. அதில் இருந்து விமானப்படை வீரர்கள் தலா 12 பேர் வீதம் 24 பேர் நவீன ரக துப்பாக்கிகளுடன் கயிறு மூலம் கடற்கரையில் இறங்கினர். எதிரிகளிடம் சண்டையிட்டு சிறை பிடிப்பது போன்ற காட்சிகளை ஒத்திகை செய்து காண்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று 2-ம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புறப்பட்டு வந்த 54 விமானங்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன. இதில், விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, வானில் குட்டிக் கரணங்கள் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின.மேலும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் ஆகியவை நடைபெற்றன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின.
மேலும் எம்.ஐ.-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளை மீட்பது போன்ற சாகச காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினர். அதேபோல், சேட்டக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தேசியக் கொடியை ஏந்தியடி சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த கண்காட்சியை ஏராளமானோர் வியந்து பார்த்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 18 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-10-2024.
02 Oct 2024 -
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி அ.தி.மு.க. மனிதச்சங்கிலி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2024சென்னை, 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான தி.மு.க.
-
தேச நலன் காக்கும் பொருட்டுகதர், கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
02 Oct 2024சென்னை, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிரொலி: 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை தொடரும்
02 Oct 2024சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
02 Oct 2024சென்னை, காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக
-
வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
02 Oct 2024சென்னை, வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம்: ஈரானுக்கு தேவையில்லாமல் யாரும் பயணிக்க வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
02 Oct 2024டெல்லி, இஸ்ரேல் எந்நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சூழலை அடுத்து ஈரானுக்கு தேவையில்லாமல் யாரும் பயணிக்க வேண்டாம் என்று இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்ச
-
இஸ்ரேல் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
02 Oct 2024டெக்ரான், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு இந்த விஷயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
-
தொலைபேசி மூலம் ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
02 Oct 2024சென்னை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
-
நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல்: ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை
02 Oct 2024ஜெருசலேம், இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
-
தேசத் தந்தை முகத்தில் விழிக்காத பாசிஸ்டுகள்: பார்லி. காந்தி சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன் பதிவு
02 Oct 2024சென்னை, பாராளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
-
மதுரையில் மீண்டும் பரபரப்பு: தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
02 Oct 2024மதுரை, மதுரையில் உள்ள 4 தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்
02 Oct 2024சென்னை, திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நலம் சீரானதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை
02 Oct 2024சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
-
லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் 500 அதிகமான பயணிகள் அவதி
02 Oct 2024சென்னை, லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-10-2024.
02 Oct 2024 -
தமிழ்நாட்டில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்
02 Oct 2024சென்னை, தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணி செய்த பிரதமர் மோடி
02 Oct 2024புதுடெல்லி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
02 Oct 2024புனே, மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது.
-
ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு
02 Oct 2024நாமக்கல், ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த தமிழக காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி: கோவை, ஈஷா மையத்தில் 2-வது நாளாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை
02 Oct 2024கோவை, சென்னை ஐகோர்ட் உத்தரவை அடுத்து கோவை ஈஷா மையத்தில் நேற்று (அக்.2) 2வது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
காமராஜரின் 50-வது நினைவு தினம்: கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
02 Oct 2024சென்னை, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு கர்மவீரரின் வாழ்வு காட்டும்
-
சாம்சங் தொழிலாளர் வேலைநிறுத்தம்: முதல்வர் தலையிட வலியுறுத்தி அக்.5-ல் சென்னையில் போராட்டம்
02 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர் சங்கத்தை தாமதமின்றி பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்கிடவும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎ
-
ஏழுமலையான தரிசனம் செய்து பவன் கல்யான் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்
02 Oct 2024திருப்பதி, ஏழுமலையான தரிசனம் செய்த பவன் கல்யான் நேற்று 11 நாள் லட்டு பரிகார விரதத்தை நிறைவு செய்தார்.
-
உ.பி.யில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை சாலையில் அமர வைத்த சம்பவத்தால் அதிர்ச்சி
02 Oct 2024லக்னோ, உத்தரபிரதேசத்தில் கல்விக்கட்டணம் செலுத்தாத 100க்கும் மேற்பட்ட மாணவர்களை சாலையில் அமர வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.