எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Modi PM 2024-12-20](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/14/Modi%20PM_2024-12-20_0.jpg?itok=1Tfj71M3)
Source: provided
வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில் உரை ஆற்றினார். அவர் பேசுகையில், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி. அதிபர் ட்ரம்ப் தமது தலைமையின் மூலம் இந்திய-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.
அவரது முதல் பதவிக்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றிய போது இருந்த உற்சாகம்; இன்றும் அதே அளவில் உள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டாண்மையும் ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதிபர் ட்ரம்ப்பின் குறிக்கோளான "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" அல்லது மகா("MAGA")வும், இந்தியாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள், அதாவது மிகா( "MIGA")வும் இணையும்போது செழிப்புக்கான "MEGA" கூட்டாண்மை உருவாகிறது. மேலும், இந்த மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை வலுப்படுத்துவோம். இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கான சட்டக வரைவு உருவாக்கப்படும். பாதுகாப்பு செயல்பாடு, தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்ட்டம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்.
விண்வெளித் துறையில் அமெரிக்காவுடன் எங்களுக்கு நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை வாகனத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்லும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மையானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள், அமைப்புகளை ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதில் குவாட் என்ற நால்தரப்பு பாதுகாப்பு பேச்சு வார்த்தை சிறப்புப் பங்கை வகிக்கும். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில், புதிய பகுதிகளில் கூட்டாண்மை நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்போம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக இணைந்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 2008-ம் ஆண்டு இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை இப்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அதிபர் முடிவு செய்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் இப்போது பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்.
அதிபர் ட்ரம்ப் அவர்களே, 1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, உங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-02-2025.
15 Feb 2025 -
முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
15 Feb 2025சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
-
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
15 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
மருத்துவ பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
15 Feb 2025சென்னை: காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேசினார்.
-
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்று தான் இருக்கும்.
-
அமெரிக்கா அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை
15 Feb 2025வாஷிங்டன் : 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
இளைஞர்கள் படுகொலைக்கு முன்விரோதமே காரணம் காவல்துறை விளக்கம்
15 Feb 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர்: இ.பி.எஸ். கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் 'பாதுகாப்பற்ற மாடல்' அரசை முதல்வர் நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெர
-
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 9 பேர் கைது
15 Feb 2025இம்பால் : மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் தவுபால் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த சிலர் கடத்தல் மற்றும் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில
-
டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
15 Feb 2025புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
-
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு ஏப்.5, 6-ல் போட்டித்தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
15 Feb 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர
-
நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் அமெரிக்க விமானங்கள் அமிர்தசரஸ் வரவதற்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
15 Feb 2025அமிர்தசரஸ்: நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிர்தசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலுவான உற்பத்தித் தளம் தேவை ராகுல் காந்தி வலியுறுத்தல்
15 Feb 2025புதுடில்லி: இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தி
-
ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
15 Feb 2025புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும் என்று பிரதமர் மோடி குறி
-
42 லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடக்கம்
15 Feb 2025டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
-
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக்குழு
15 Feb 2025புதுடில்லி : புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.
-
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுவித்தது ஹமாஸ்
15 Feb 2025காசா முனை : இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.
-
திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் : 'திஷா' குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை : திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று 'திஷா' குழு கூட்டத்தில் முதல
-
சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம்
15 Feb 2025மாஸ்கோ : சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
-
மத்திய அரசால் நலத்திட்டங்கள் சென்றடைவதில் தாமதம்: பாகுபாடு பார்க்காமல் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை: மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: சண்மும் வலியுறுத்தல்
15 Feb 2025ராமநாதபுரம் : பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலி
-
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. பேச்சாளர்கள் பட்டியலில் வெளியீடு : வரும் 1-ம் தேதி பெரியகுளத்தில் இ.பி.எஸ். பேசுகிறார்
15 Feb 2025சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் மார்ச்- 1ம்தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
சென்னை அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர்
15 Feb 2025சென்னை : சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
15 Feb 2025சென்னை : கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.