எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா செயல்பட்டபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதேவேளை, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ தீபா, தீபக் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ஜெயலலிதா 2016ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதாவின் நகைகள், சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படியும், கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தீபா, தீபக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், தீபா, தீபக் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், சொத்து ஆவணங்கள், வெள்ளி பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணியை கர்நாடக அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.
மொத்தம் 481 வகையான நகைகள் இருக்கிறது. இதில் மதியம் 2 மணி வரை 150 நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. எண்ணிக்கைப்படி நகைகள் சரிபார்க்கப்பட்டன. அதன் எடை, அவை தங்கம், வைரம் தானா? என்று ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த விலை மதிப்புமிக்க நகைகளை கொண்டு செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஒரு உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30 போலீசார் பெங்களூரு வந்தனர். இந்த பணிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மொத்தமுள்ள 481 வகையான நகைகளில், 290 நகைகளின் எடையளவு மதிப்பீட்டு பணி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மீதியுள்ள 191 நகைகளும் கர்நாடக கருவூல அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று மீதமுள்ள நகைகள் நீதிபதி முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், 481 வகையான நகைகளும் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
27 கிலோ தங்க நகைகள், வைர நகைகளுடன்,1562 ஏக்கர் சொத்து ஆவணங்களும் கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. தங்க ஆபரணங்கள் உரிய மதிப்பீடு செய்து 6 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டதாக கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஜாவர்கி தெரிவித்தார். அதில், 1.2 கிலோ எடையுள்ள ஒட்டியாணம், 1 கிலோ எடையுள்ள கிரீடம், 60 கிராம் எடை கொண்ட தங்க பேனா, தங்க வாள், தங்க வாட்ச், ஜெயலலிதா முக பொறித்த தட்டு ஆகியவையும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Feb 2025சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-02-2025.
20 Feb 2025 -
பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி
20 Feb 2025புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.
-
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்
20 Feb 2025சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
20 Feb 2025புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்
20 Feb 2025புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஜெ.பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவுங்கள்: கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வேண்டுகோள்
20 Feb 2025சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
20 Feb 2025மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
-
டெல்லி புதிய முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா நேற்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
-
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
20 Feb 2025சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Feb 2025சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவா
-
டெல்லி சபாநாயகர் பதவிக்கு விஜேந்தர் குப்தா பெயர் பரிந்துரை
20 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து
20 Feb 2025அரிசோனா: அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Feb 2025சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
புதிய நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
20 Feb 2025சென்னை: ரூ.92.50 கோடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Feb 2025சென்னை: கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான ரூ.2,152 கோடி நிதியினை உ
-
மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லி முதல்வர் வரை! யார் இந்த ரேகா குப்தா?
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள்
-
வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
20 Feb 2025நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
விரைவு ரயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே
20 Feb 2025சென்னை: விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
சில ஆண்டுகள் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விருப்பம் மனம் திறந்த எம்.எஸ்.டோனி
20 Feb 2025மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது.
-
அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலை எதிர் சவால்
20 Feb 2025சென்னை: அண்ணா சாலைக்கு தனியாக வர தயார் என்று உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு அண்ணாமலை எதிர் சவால் விடுத்துள்ளார்.
-
320 ரன்களை எதிர்பார்க்கவில்லை: நியூசி. கேப்டன் ஆச்சர்யம்
20 Feb 2025கராச்சி: நாங்கள் 260 ரன்கள் அடிப்போம் என்று தான் நினைத்திருந்தோம்.
-
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: வரும் 4-ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
20 Feb 2025தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
பறிபோன ஹாட்ரிக் வாய்ப்பு
20 Feb 2025கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று (பிப்.
-
எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு
20 Feb 2025வாஷிங்டன்: இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.