எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: - காவிரிக் கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும் என்றும் தமிழ்நாடு முதல்வர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழ்நாடு முதல்வர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நூலகத்தின் தரைத் தளத்தில் – வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில் - அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி; இரண்டாம் தளத்தில் - கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்; மூன்றாம் தளத்தில் – தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் - படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி; நான்காம் தளத்தில் - ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி; ஐந்தாம் தளத்தில் - அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி; ஆறாம் தளத்தில் – நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்; ஏழாம் தளத்தில் - காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-03-2025.
22 Mar 2025 -
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: சந்திரபாபு, மம்தா பங்கேற்கவில்லை
22 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பங்
-
ஒருபோதும் தமிழகம் எதிர்க்கவில்லை: தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது.
-
சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனாவுக்கு தைவான் கண்டனம்
22 Mar 2025தைபேய் சிட்டி, தைவான் நாட்டு கடல் பகுதியில் சீனா சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு அந்நாட்டின் கடலோரக் காவல் படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான 2-வது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும்: ரேவந்த் ரெட்டி
22 Mar 2025சென்னை, நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
-
7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுப்பொருட்கள்
22 Mar 2025சென்னை : 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
கையெறி குண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 3 பேர் பலி
22 Mar 2025லாகூர் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.
-
மக்களைச் சந்திக்கிறார் போப்
22 Mar 2025வாடிகன் : போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப்.
-
ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்
22 Mar 2025மும்பை, செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி : கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து
22 Mar 2025சென்னை : தொகுதி மறுவரையறை என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
22 Mar 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுப்பொருட்கள்
22 Mar 2025சென்னை : 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழுவில் ஆங்கிலம், தாய் மொழியில் பெயர் பலகை
22 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது.
-
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் 2-ம் பட்சமாக மாறும்: தெலுங்கானா முதல்வர்
22 Mar 2025சென்னை, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் இரண்டாம் பட்சமாக மாறும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.
-
அரபிக்கடல் பகுதியில் நிலநடுக்கம்
22 Mar 2025புதுடெல்லி, அரபிக்கடலில் நேற்று காலை 10.55 மணியளவில் ரிக்டரில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவானது.
-
முறைகேடாக நியமனம்: பீகாரில் 33 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
22 Mar 2025கோபால்கஞ்ச், பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
துணை முதல்வர் கோவை வருகை: பாதுகாப்பு பணியில் 600 போலீசார்
22 Mar 2025கோவை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார். இதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வருகை
22 Mar 2025சென்னை : இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் ஏர்இந்தியா விமானத்தில் சென்னை வந்தனர்.
-
1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணெக்கெடுப்பு அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
22 Mar 2025சென்னை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மா
-
தென் கொரியாவில் காட்டுத்தீ: மக்கள் வெளியேற உத்தரவு
22 Mar 2025சியோல் : தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது
22 Mar 2025இஸ்தான்புல், துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும்: பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு
22 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.
-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது : நவீன் பட்நாயக் கண்டனம்
22 Mar 2025புவனேஸ்வர் : மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது என பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
முறைகேடு புகார் எதிரொலி: பீகாரில் 33 ஆசிரியர்கள் பணிநீக்கம்
22 Mar 2025கோபால்கஞ்ச் : பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது: கே.டி.ராமாராவ்
22 Mar 2025சென்னை : தொகுதி மறுவரையறை அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது என்று கேடி ராமாராவ் தெரிவித்தார்.