எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஏற்கனெவே மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நூறு சதவீதம் காலியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகளிலேயே பணியாளர்கள் இல்லாத நிலையில், இல்லம் தேடி மருத்துவம்" என்று தி.மு.க. அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு வருவது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில், துணை சுகாதார நிலைய அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் நூறு சதவீதம் காலியாக உள்ளதாகவும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023-ல் வெளியிடப்பட்டதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதுவரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நூறு சதவீதம் பணியிடங்கள் காலியாகும் அளவுக்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது தி.மு.க. அரசு. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால், அறிவிப்பில் உள்ள குறைகளை நீக்கி, நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பி இருக்கலாம். தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை. தி.மு.க. அரசின் நோக்கமே காலிப் பணியிடங்களை நிரப்பாமல், திட்டங்களை அறிவித்து விளம்பரத்திலேயே ஆட்சியை நடத்திவிடலாம் என்பதுதான்.
ஆனால், பொதுமக்கள் கள யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எப்போதும் ஏககாலத்தில் ஏமாற்ற முடியாது என்ற ஆப்ரகாம் லிங்கனின் வரிகளை நினைவுபடுத்தி, காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 day ago |
-
அவர் தவழ்கின்ற குழந்தை: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
29 Mar 2025சென்னை : விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
-
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை : கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025கோவை, திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
29 Mar 2025புதுடெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
-
மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அனுமதி
29 Mar 2025வடவள்ளி, மருதமலை கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி முதல் யாகசாலை பூஜை பக்தர்களுக்கு அனுமதி
-
உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி வாழ்த்து
29 Mar 2025சென்னை : உகாதி திருநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகள்ளை தெரிவித்துள்ளனர்.
-
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
29 Mar 2025டெல்லி, : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
-
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம்
29 Mar 2025திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
-
சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
29 Mar 2025சென்னை : முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
மியான்மர் நிலநடுக்க உயரிழப்பு எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு
29 Mar 2025பாங்காக், மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
29 Mar 2025பெய்ரூட், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கி உள்ளதாக இஸ்ரேல் தகவல்
-
சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை
29 Mar 2025சென்னை : சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 26 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் போராட்டம்; வன்முறை - இருவர் பலி
29 Mar 2025காத்மாண்டு, நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன.
-
பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
29 Mar 2025வாஷிங்டன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விளையாட்டு வீரருக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இருப்பது சகஜம் : கேப்டன் ரோகித் சர்மா கருத்து
29 Mar 2025மும்பை : வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு என ரோகித் சர்மா தெரிவித
-
டெல்லி நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
29 Mar 2025புதுடெல்லி, டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
-
கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்ப் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது: அதிபர் புதின் திட்டவட்டம்
29 Mar 2025மாஸ்கோ, கிரீன்லாந்தை கைப்பற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தில் ரஷ்யா தலையிடாது என விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
-
சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை
29 Mar 2025பெங்களூரு, சைபர் மோசடியில் ரூ.50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
-
நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் ? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
29 Mar 2025சென்னை : உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் தீர்ப்பு
29 Mar 2025திருச்சி, திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
-
செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
29 Mar 2025சென்னை : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
29 Mar 2025சென்னை : ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
-
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் எந்த அநீதியும் செய்யப்படாது: அமித்ஷா உறுதி
29 Mar 2025புதுடெல்லி : தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
-
சவரன் ரூ.67,000-ஐ நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
29 Mar 2025சென்னை, சவரன் ரூ.67,000-ஐ நெருங்கி தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
ஆதிதிராவிட மாணவர்களுக்கான புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்
29 Mar 2025சென்னை, : சென்னையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதியை ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார
-
ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
29 Mar 2025மதுரை : மதுரையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.