அன்னப்பறவை என்றாலே நமக்கெல்லாம் பொதுவாக பால் போன்ற வெள்ளை நிற அன்னப் பறவைகள்தான் நினைவுக்கு வரும். நம்மூர்களில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த வெள்ளை நிற அன்னப் பறவைகள் தற்போது மிகவும் அருகி விட்டன. அவை அரிய வகை பறவையினங்களில் ஒன்றாக மாறிவிட்டன. தற்போது வட கொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுதான் கருப்பு நிற அன்னப் பறவைகளை அதிக அளவில் இனப் பெருக்கம் செய்து, அதன் இறைச்சியை விற்பதன் மூலம் உணவுத்தட்டுப்பாட்டை போக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்புகிறது. இதனால் தற்போது வட கொரியாவில் கருப்பு நிற அன்னப்பறவையின் ராஜ்ஜியம் மேலோங்கத் தொடங்கியுள்ளது. அவற்றை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் மடமடவென வளர்ந்து வருகிறது. வெள்ளை அன்னப் பறவைகளைப் போலவே கருப்பு நிற அன்னப் பறவைகளும் பிரத்யேக குணங்களைக் கொண்டதாக உள்ளன. அவற்றின் இறைச்சி கருப்பு நிறத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நம்மூர்களில் ஒரு சில இடங்களில் காணப்படும் கருமை கோழிகளை போன்றவைதான் இவையும். எனவே கருப்பு அன்னப் பறவைகள் இனப் பெருக்கத் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இயற்கை எப்போதும் விநோதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதில் போபாப் எனப்படும் மரமும் ஒன்று. இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா... தென் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. போபாப் (Baobab) என்ற இந்த மரங்களை அங்கே Gentle Giants என்கின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாக்குபிடித்து வளர்பவை. அதே நேரத்தில் மண்ணிலிருந்து எடுக்கும் நீரை இந்த மரங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மழை இல்லாத வறண்ட காலங்களில் அப்பகுதி மக்கள் இந்த மரத்தில் துளை போட்டு நீரை எடுத்துக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... சிலர் இவற்றை தமிழகத்துக்கும் கொண்டு வந்தனர். மதுரை பார்ச்சூன் ஹோட்டல், பெங்களூரு அருகே சாவனூரில் 500 ஆண்டுகள் பழமையான மரம், சென்னை அடையாறு தியோசபிகல் வளாகத்தில் பராமரிக்கப்படும் இவற்றை நாம் பார்க்கலாம்.
துருக்கியின் அங்காரா நகரைச் சேர்ந்த முராட் எஞ்சின் மற்றும் சீயாடா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் முகத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த இதய வடிவிலான மச்சம் ஒன்று இருப்பதை கண்டு அவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த இதய வடிவ மச்சம் தங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என அவர்கல் நம்புகின்றனர்.
மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.
நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியில் வளர்க்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு மனித நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, அதை முழுமையான ஆற்றலுடன் இயங்கக்கூடிய வகையில் இணைத்து சாதனை படைத்துள்ளனர். பன்றியின் உடலில் வளர்க்கப்பட்ட சிறுநீரகம் இப்போது மனித உடலில் சாதாரணமாக வேலை செய்வதைக் கண்டறிந்துள்ளனர். உறுப்புகளில் கோளாறு ஏற்பட்டு, நோய்வாய்ப்படும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முயற்சிதான் உடல் உறுப்பு மாற்றம் செய்யும் முறை. இது இப்போது வேறொரு முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது, உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையை காட்டிலும், உறுப்பு மாற்றம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாகப் பலரும் உயிர் இழக்கின்றனர். இதற்கான தீர்வாக மரபணு மாற்ற முறைப்படி பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தலாம் என்ற முயற்சி முன்வைக்கப்பட்டது. அதன்படி, மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதரின் குடும்பத்தின் ஒப்புதலுடன், மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு இணைத்து, அவரை வென்டிலேட்டரில் உயிருடன் வைத்து அசாதாரணமான சோதனையை மேற்கொண்டனர். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது அது எதிர்பார்த்ததை விட இயல்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்6 hours 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 5 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 1 day ago |
-
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை துண்டுத்துண்டாக வெட்டிக் கொன்றவர் கைது: சி.சி.டி.வி. மூலம் சில மணி நேரத்தில் பிடிபட்டார்
19 Sep 2024சென்னை, சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இருந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2024.
19 Sep 2024 -
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க எடப்பாடி வலியுறுத்தல்
19 Sep 2024சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பது எப்போது ? அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில்
19 Sep 2024சென்னை, உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தமிழக காங். கட்சியின் செயற்குழு கூட்டம்: ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கண்டித்து தீர்மானம்
19 Sep 2024சென்னை, தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
-
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு
19 Sep 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம், மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாந
-
திருப்பதி பிரமோற்சவ விழா: மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை
19 Sep 2024திருப்பதி, கருட சேவையையொட்டி 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கங்கைகொண்டான் சிப்காட் பூங்காவில் பெண்களுக்கான குடியிருப்பு வளாகம்: டி.பி. சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
19 Sep 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.
-
லெபனானில் வெடித்த வாக்கி டாக்கிகள் எங்களது தயாரிப்பு அல்ல: ஜப்பான் நிறுவனம் மறுப்பு
19 Sep 2024டோக்கியோ, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வாக்கி டாக்கிகள் தங்கள்
-
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: இஸ்ரேல்
19 Sep 2024ஜெருசலேம், ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்
-
சத்துணவு முட்டை விவகாரம்: உணவகத்திற்கு 'சீல்' வைத்த அதிகாரிகள்: சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்
19 Sep 2024திருச்சி, துறையூரில் தனியார் உணவத்திற்கு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகளை விற்பனை செய்த புகாரில் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார
-
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது: பா.ஜ.க.வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Sep 2024சென்னை, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பா.ஜ.க.வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
19 Sep 2024மதுரை, மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
விண்வெளியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து
19 Sep 2024நியூயார்க், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வலைதளங்களில்
-
மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Sep 2024சென்னை, அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தாம்பரம் மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க.
-
ஆந்திராவில் வரும் 1-ம் தேதி முதல் தனியார்மயமாகும் மதுபான கடைகள்: ரூ. 99-க்கு புதுவகை மது அறிமுகம்
19 Sep 2024அமராவதி, ஆந்திராவில் வரும் 1-ம் தேதி முதல் ரூ. 99-க்கு 180மிலி மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன.
-
நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார் ராகுல்: மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
19 Sep 2024ஜம்மு, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் ராகுல் நிற்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, அவர் நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருவத
-
உதகையில் நீர் பனிப்பொழிவு: கடும் குளிரால் மக்கள் அவதி
19 Sep 2024ஊட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று வெயில் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
19 Sep 2024சென்னை, தமிழகத்தில் இன்று 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிஷி அமைச்சரவையில் புதுமுகத்துக்கு வாய்ப்பு
19 Sep 2024புது டெல்லி, டெல்லியில், நாளை 21-ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி அமைச்சரவையில் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ.,வான, முகேஷ் அலாவத்திற்கு வாய்ப்பு கிடைக
-
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு
19 Sep 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும்: பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Sep 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரத
-
ஹஜ் பயணம்: அமீரகத்தை சேர்ந்தவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: இஸ்லாமிய விவகாரத்துறை அறிவிப்பு
19 Sep 2024அபுதாபி, அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நேற்று முதல் வருகிற 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணைய
-
முன்கூட்டியே பேஜர்களை வெடிக்க வைத்த இஸ்ரேல்? வெளியான தகவலால் அதிர்ச்சி
19 Sep 2024டெல்அவிவ், லெபனானில், ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்களை செவ்வாயன்று மதியம் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து, இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருக்