எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.
அப்போது புரோகிதர்கள் முன்னிலையில் எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் மற்றும் பூஜை செய்தார் .தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, குரு பகவான், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதியில் வழிபட்டார்.
பின்னர் அவர் இரும்பு ஆர்ச் பகுதியில் பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு மட்டுமே ரூ. 3 லட்சம் கோடி அளவிற்கு பிரதமர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பி, சி நகரங்களில் எப்.எம். ரேடியோ அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரெயில்வே திட்டத்திற்கு மட்டும் ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 2047-ம் ஆண்டு நாம் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக, உலகிற்கே தலைமை வகிக்கும் நாடாக, வல்லரசு நாடாக மாறும் வகையில் இந்த 100 நாட்களில் மிகப்பெரிய சாதனைகளை பாரத பிரதமர் செய்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது. 2047-ல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலில் அதிக செலவினங்கள் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் ஏற்றுக் கொள்வதாக கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு வழங்கக் கூடிய நிதிக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அந்த நிதி வழங்கப்படும்.
தமிழக முதல்வர் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று வந்ததை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் தான் மது ஒழிப்பு மாநாடு.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மத்திய வெளியுறவுத்துறை துரிதமாக செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஜி.பி.எஸ். கருவிகள் போன்றவற்றை வழங்கி உள்ளோம். மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க மானியத்துடன் கூடிய பெரிய மீன்பிடி படகுகளை வழங்கி உள்ளோம்.
மீனவர்களுக்கு கடல் பாசி பூங்கா கொண்டு வந்துள்ளோம்.தொடர்ந்து மீனவர் நலனுக்காக தொடர்ந்து இந்த ஆட்சி பாடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உடனடியாக இலங்கை அரசிடம் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பின் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும்?தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடை எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறிய தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. கிராமங்களில் அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் உங்களை வரவேற்கிறேன் என்கின்ற விளம்பரங்கள் இருக்கின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மகளிரணி மாநில பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், பாராளுமன்ற பொறுப்பாளர் விவேகம் ரமேஷ், பா.ஜ.க. நகர தலைவர் நவ மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 5 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 3 days ago |
-
சேப்பாக்கம் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 149 ரன்களில் அவுட்- 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 81/3
20 Sep 2024சென்னை : சேப்பாக்கம் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ராவின் அபார பந்துவீச்சில் 149 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட்டானது.
-
ஐ.பி.எல். ராஜஸ்தான் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர்
20 Sep 2024புதுடெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெகா ஏலம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2024.
21 Sep 2024 -
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
20 Sep 202410 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்
20 Sep 2024சென்னை : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஜெய்ஸ்வால் சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ளார்.
-
ரோடு ஷோ மூலம் அரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம்
20 Sep 2024சண்டிகர் : ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
-
இலங்கையின் புதிய அதிபர் யார்? - இன்று தேர்தல் முடிவுகள் வெளியீடு
21 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
21 Sep 2024திருப்பதி : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்
-
திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் : 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என பேட்டி
21 Sep 2024திருச்செந்தூர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவ
-
உணவு பாதுகாப்பு குறியீட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரள மாநிலம் முதலிடம் : தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது
21 Sep 2024திருவனந்தபுரம் : உணவு பாதுகாப்பு குறியீட்டில் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
21 Sep 2024புதுடெல்லி : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
-
மோடியைக்கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது: அமித்ஷா பேச்சு
21 Sep 2024ஸ்ரீநகர் : மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்
-
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளையா? - விசாரணைக்கு உள்ளான கேரள நபர்
21 Sep 2024சோபியா : ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறிய ரின்சன் ஜோஸ் என்பவரை பல்கேரிய போலீசார் தங்களது விசாரணை வள
-
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
21 Sep 2024ஜெருசலேம் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தள
-
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
21 Sep 2024திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
கொல்கத்தாவில் 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
21 Sep 2024கொல்கத்தா : கடந்த 42 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்கள் நேற்று பணிக்கு திரும்பினர்.
-
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
21 Sep 2024சென்னை : குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
21 Sep 2024சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
19 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி விடுவிப்பு
21 Sep 2024ஜகார்த்தா : கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்கு பின் நேற்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த ஆந்திர மாநில அரசு
21 Sep 2024ஐதராபாத் : மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
-
முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
21 Sep 2024தஞ்சாவூர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது : காங்கேசன் துறை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை
21 Sep 2024கொழும்பு : இலங்கையின் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
-
கோவையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
21 Sep 2024கோவை : கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லட்டு சர்ச்சை எதிரொலி; உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் கோவில் பிரசாதங்கள் ஆய்வு
21 Sep 2024லக்னோ : உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட நடன இயக்குனர் ஜானி
21 Sep 2024ஐதராபாத், பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.