எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாள்களில் ரூ.440 வரை குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.480 உயா்ந்தது. கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.6,885-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையானது.
சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சத்தை தொட்ட விலை, பின்னர் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி மற்றும் சுங்க வரி குறைப்பை அடுத்து அன்று மாலையை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அடுத்த வாரத்தில் தங்கத்தின் மீதான விலை குறைவு நின்றது.
அதன்பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் வரலாற்றில் புதிய உச்சமாக ஒரே நாளில் சனிக்கிழமை அதிரடியாக ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனையானது. தங்கம் அதிரடி விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை உயா்ந்துள்ளது என்றும்,மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் சென்னை தங்கம் விலை நிலவரம் (1 கிராம்) வருமாறு., செப் 21-ம் தேதி: ரூ. 6,960 (+75) பவுன் ரூ.55,680, செப் 20-ம் தேதி: ரூ. 6,885 (+60) பவுன் ரூ.55,080, செப் 19-ம் தேதி: ரூ. 6,825 (-25) பவுன் ரூ.54,600, செப் 18-ம் தேதி: ரூ. 6,850 (-15) பவுன் ரூ.54,800, செப் 17-ம் தேதி: ரூ. 6,865 (-15) பவுன் ரூ.54,920, செப் 16-ம் தேதி: ரூ. 6,880 (+15) பவுன் ரூ.55,040, செப் 15-ம் தேதி: ரூ. 6,865 (0) பவுன் ரூ.54,920, செப் 14-ம் தேதி: ரூ. 6,865 (+40) பவுன் ரூ.54,920, செப் 13-ம் தேதி: ரூ. 6,825 (+120)பவுன் ரூ. 54,600, செப் 12-ம் தேதி: ரூ. 6,705 (-10) பவுன் ரூ. 53,640.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 5 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 3 days ago |
-
சேப்பாக்கம் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 149 ரன்களில் அவுட்- 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 81/3
20 Sep 2024சென்னை : சேப்பாக்கம் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ராவின் அபார பந்துவீச்சில் 149 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட்டானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2024.
21 Sep 2024 -
ஐ.பி.எல். ராஜஸ்தான் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர்
20 Sep 2024புதுடெல்லி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெகா ஏலம்...
-
இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
20 Sep 202410 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
ரோடு ஷோ மூலம் அரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம்
20 Sep 2024சண்டிகர் : ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்
20 Sep 2024சென்னை : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஜெய்ஸ்வால் சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் : 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என பேட்டி
21 Sep 2024திருச்செந்தூர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவ
-
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
21 Sep 2024சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
21 Sep 2024சென்னை : குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
21 Sep 2024திருப்பதி : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்
-
இலங்கையின் புதிய அதிபர் யார்? - இன்று தேர்தல் முடிவுகள் வெளியீடு
21 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
கொல்கத்தாவில் 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
21 Sep 2024கொல்கத்தா : கடந்த 42 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்கள் நேற்று பணிக்கு திரும்பினர்.
-
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
21 Sep 2024திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
21 Sep 2024புதுடெல்லி : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
-
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
21 Sep 2024ஜெருசலேம் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தள
-
மோடியைக்கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது: அமித்ஷா பேச்சு
21 Sep 2024ஸ்ரீநகர் : மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்
-
உணவு பாதுகாப்பு குறியீட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரள மாநிலம் முதலிடம் : தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது
21 Sep 2024திருவனந்தபுரம் : உணவு பாதுகாப்பு குறியீட்டில் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளையா? - விசாரணைக்கு உள்ளான கேரள நபர்
21 Sep 2024சோபியா : ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறிய ரின்சன் ஜோஸ் என்பவரை பல்கேரிய போலீசார் தங்களது விசாரணை வள
-
19 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி விடுவிப்பு
21 Sep 2024ஜகார்த்தா : கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்கு பின் நேற்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த ஆந்திர மாநில அரசு
21 Sep 2024ஐதராபாத் : மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
-
முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
21 Sep 2024தஞ்சாவூர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட நடன இயக்குனர் ஜானி
21 Sep 2024ஐதராபாத், பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது : காங்கேசன் துறை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை
21 Sep 2024கொழும்பு : இலங்கையின் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
-
லட்டு சர்ச்சை எதிரொலி; உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் கோவில் பிரசாதங்கள் ஆய்வு
21 Sep 2024லக்னோ : உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
21 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.