முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதகையில் புலி தாக்கி இளைஞர் பலி

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

உதகை, உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்தவர் கேந்தர் குட்டன். தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் வழக்கம்போல எருமைகளை மேய்க்கச் சென்ற கேந்தர் குட்டன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவரது உடல் அருகிலுள்ள வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. அவர் புலி தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து