எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை மற்றும் உயர்நிலை தலையீடுகள் மூலம் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்று பத்திரமாக நாடு திரும்புவதை உறுதி செய்துள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்திய கைதிகள் 500 பேருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது. யுஏஇ அரசின் இந்த முடிவு, யுஏஇ – இந்தியா இடையிலான நெருக்கமான ராஜந்திர உறவை நிரூபிக்கிறது.
இந்த வெற்றிகரமான முயற்சிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ராஜதந்திர அந்தஸ்தையும், வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பதில் மோடி அரசின் இடைவிடாத அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். தமிழக மீனவர்கள் விடுவிப்பு: பிரதமர் மோடி அரசின் ராஜந்திர முயற்சியால் இந்திய குடிமக்கள் விடுவிக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் வருமாறு: கடந்த 2022 முதல் யுஏஇ நாட்டில் இருந்து 2,783 இந்திய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2019-ல் தனது இந்திய பயணத்தின்போது 850 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார். 2023-ல் கத்தாரில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஈரான் அரசு கடந்த 2024-ல் 77 இந்தியர்களையும், 2023-ல் 12 மீனவர்கள் உள்ளிட்ட 43 இந்தியர்களையும் விடுவித்தது. 2019-ல் பிரதமர் மோடியின் வருகையின் போது பஹ்ரைன் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. 2017-ல் குவைத் அமீர் 22 இந்தியர்களை விடுவித்தார். 97 பேருக்கு தண்டனைகளை குறைத்தார்.
மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக இலங்கை அரசு கடந்த 2014 முதல் 3,697 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இதுபோல் பாகிஸ்தான் கடந்த 2014 முதல் 2,638 இந்திய மீனவர்களையும் 71 இந்திய கைதிகளையும் விடுதலை செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பத்திரப்பதிவில் ஒரு சதவீதம் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இன்று முதல் அமல்
31 Mar 2025சென்னை, பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது இன்று முதல் (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சத
-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு மூன்று மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
31 Mar 2025விருதுநகர் : தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆழ்கடல் சுரங்க அனுமதி விவகாரம்: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்
31 Mar 2025புதுடெல்லி : ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
-
ரூ.5 முதல் ரூ.25 வரை அதிகரிப்பு: 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
31 Mar 2025சென்னை, தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படிரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
-
போலீஸ் என்கவுன்டர்: மதுரையில் ரபல ரவுடி சுட்டுக்கொலை
31 Mar 2025மதுரை : மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நியமனம்
31 Mar 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பாம்பன் ரயில் பாலம் திறப்பிற்கு பிரதமர் வருகை: மண்டபம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகை
31 Mar 2025ராமேஸ்வரம் : பாம்பன் கடலில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில் செங்குத்து தூக்கு பாலத்தை திறந்தும், ரயில் சேவை துவங்கி வைப்பதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்
-
ஜோகோவிச் கனவு தகர்ந்தது: மியாமி ஓபனை வென்றார் ஜேக்கப்
31 Mar 2025மியாமி : மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி செக்.
-
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்: சி.எஸ்.கே-வை முந்தியது ஆர்.சி.பி.
31 Mar 2025சென்னை : இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் பின்தொடரும் ஐ.பி.எல். அணிகளில் சி.எஸ்.கே-வை ஆர்.சி.பி முந்தியது.
ஐ.பி.எல். தொடர்...
-
முதல் முறையாக 5 விக்கெட்
31 Mar 2025ஐ.பி.எல். தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின.
-
டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை: பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல்
31 Mar 2025சென்னை : டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
-
சிறப்பான தொடக்கம் இல்லாததே தோல்விக்கு காரணம்: ருதுராஜ்
31 Mar 2025கவுகாத்தி : சிறப்பான தொடக்கம் இல்லாததே சென்னை அணி தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
தாமதமாக பந்து வீச்சு: ராஜஸ்தான் கேப்டனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்
31 Mar 2025கவுகாத்தி : தாமதமாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
-
தொடரும் சோக வரலாறு: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2-வது தோல்வி
31 Mar 2025கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.