முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      உலகம்
Kattikkuttu-2025-1-15

Source: provided

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம். இந்நிலையில், ஆம்ஸ்டர்டாமில் நேற்றுமுன்தினம் மாலை (அந்நாட்டு நேரப்படி) கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆம்ஸ்டர்டாமின் பிரபலமான டேம் சதுக்கத்தில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள சந்தைப்பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். 

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் பிடித்தனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 day ago
View all comments

வாசகர் கருத்து