எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 11 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. பகுதி நேரப் பணியாக இருந்த போதிலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 12 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது.
அதுமட்டுமின்றி மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு வெறும் ரூ.12,500 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கி வரும் தி.மு.க. அரசின் செயல் சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும். இதனை வழங்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பெருமக்கள் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று அதிகாரிகளால் உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் தொடர்கதையாகிப்போனதுதான் வேதனையின் உச்சம்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது. இந்த வகையில் ஒவ்வொரு சிறப்பாசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம்; அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு சிறப்பாசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், அதையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.
பின்னர் பிறப்பிக்கப்பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இருபள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர ஆசிரியர்களையே, ஆசிரியர் இல்லாத வகுப்புகளையும் கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதுதான். இவ்வாறாக இவர்களை முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 12 மாதங்களும் பணி வழங்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும்தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதியைத்தானே பகுதிநேர ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக்கோருகிறார்கள்? இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கிய 44,767 கோடியிலிருந்து, வெறும் 300 கோடி நிதி ரூபாய் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கி, காலமுறை ஊதியம் வழங்க போதுமானது. அதை நிறைவற்றுவதில் தி.மு.க. அரசுக்கு என்ன தயக்கம்? அறிவையும், நேர்மையையும் கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது பச்சைத்துரோகம் இல்லையா?
ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் அரசாணையை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டுமெனவும், தேசத்தின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட விடாது உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 days ago |
-
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
31 Mar 2025சென்னை : கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?
31 Mar 2025புதுடெல்லி, செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் அ.தி.மு.க.வினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வீர தீர சூரன்-2 விமர்சனம்
31 Mar 2025ஒரு பெண் காணாமல் போகிறாள். இதனால் மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு சிக்கல் வருகிறது.
-
பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பத்திரப்பதிவில் ஒரு சதவீதம் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இன்று முதல் அமல்
31 Mar 2025சென்னை, பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது இன்று முதல் (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சத
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது: மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை : பொதுமக்கள், நகைபிரியர் கவலை
31 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்தது.
-
வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு
31 Mar 2025மதுரை, வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தவறியும் கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன்
31 Mar 2025திருவண்ணாமலை, தவறியும்கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-03-2025.
31 Mar 2025 -
தமிழக அரசியலில் புதிய ட்ரெண்ட்: கிபிலி பாணி ஓவியத்தை பகிர்ந்த இ.பி.எஸ்.
31 Mar 2025சென்னை : காலத்தால் அழியாத கலை வடிவில் மறக்கமுடியா தருணங்களை உருவாக்கியுள்ளதாக கிபிலி பாணி ஓவியங்களைப் பகிர்ந்து சிலாகித்துள்ளார் அ.தி.மு.க.
-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு மூன்று மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
31 Mar 2025விருதுநகர் : தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
பங்குனி ஆராட்டு விழா: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
31 Mar 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று (ஏப். 1) நடை திறப்படுகிறது.
-
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் யார்? - சில நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது
31 Mar 2025சென்னை : தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புகொடி ஏந்தி எதிர்ப்பு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
31 Mar 2025சென்னை : ஏப்.
-
அறம் செய் விமர்சனம்
31 Mar 2025அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து சக மாணவர்களுடன் இணைந்து போராடுகிறார் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், இதனால்,
-
பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது
31 Mar 2025திருச்சூர் : காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
-
4 மொழிகளில் வெளியாகும் சாரி
31 Mar 2025ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப
-
2029-லும் மோடியே பிரதமராக இருப்பார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னவீஸ் உறுதி
31 Mar 2025மும்பை : 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.
-
டிரம்ப் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்
31 Mar 2025டெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து ஈரான் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
கொஞ்சநாள் பொறு தலைவா டிரெல்யர் வெளியீட்டு விழா
31 Mar 2025ஆருத்ரன் பிக்சர்ஸ், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொஞ்ச நாள் பொறு தலைவா.
-
எல்-2 எம்புரான் விமர்சனம்
31 Mar 2025கேரள மாநில முதலமைச்சரின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு க
-
‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் ஆதரவு
31 Mar 2025திருவனந்தபுரம் : ‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் பூகம்பத்தில் 700 முஸ்லிம்கள் பலி..?
31 Mar 2025மண்டாலே : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியு
-
ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
31 Mar 2025புதுடெல்லி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
போலீஸ் என்கவுன்டர்: மதுரையில் ரபல ரவுடி சுட்டுக்கொலை
31 Mar 2025மதுரை : மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அன்பு, அமைதி, நல்லிணக்கம் வளர்பிறையாக வளரட்டும் : நடிகர் விஜய் ரமலான் வாழ்த்து
31 Mar 2025சென்னை : தமிழகத்தில் நேற்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.