முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ சாராயம் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை?: ஜூலை 3-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 26 ஜூன் 2024      தமிழகம்
CBI 2023 04 19

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பான விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க, மற்றும் பா.ம.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் பா.ம.க சார்பில், வழக்கறிஞர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,  அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து