முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி விடுவிப்பு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      உலகம்
Indonesia 2024-03-21

Source: provided

ஜகார்த்தா : கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்கு பின் நேற்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது. அந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், அவர்களை ஒடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எனினும், நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என தொடர்ந்து அந்த கிளர்ச்சி படை கோரிக்கை வைத்ததை அரசு புறக்கணித்தன. இதன்பின், நியூசிலாந்து ராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சி படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானி பிலிப் மெர்தன்ஸ் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுசி ஏர் வர்த்தக விமானத்தில் டுகா பகுதியில் அமைந்த பாரோ விமான நிலையத்தில் சென்று இறங்கிய போது கிளர்ச்சியாளர்கள் படை அவரை பணய கைதியாக பிடித்து சென்றது.

அவரை மீட்க இந்தோனேசியா ராணுவம் முயற்சித்து வந்தது.  இதில், விமானி பிலிப் அடைத்து வைக்கப்பட்டு இருக்க கூடும் என நம்பப்படும் பகுதியை ராணுவ வீரர்கள் வளைத்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிளர்ச்சியாளர்கள் படை துப்பாக்கிகளால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 13 வீரர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து அவரை மீட்கும் பணியில் இந்தோனேசியா ராணுவம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் 19 மாதங்களுக்கு பின்னர் விமானி பிலிப் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப் நேற்று அதிகாலை இந்தோனேசிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து உடல்நல பரிசோதனைக்காக மெஹர்டென்ஸ் சுரங்க நகரமான டிமிகாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து