முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி: மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      தமிழகம்
Marina--Flight--2024-10-02

சென்னை, வரும் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மெரினாவில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற விமான சாகச ஒத்திகையின் போது மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அதே போன்று வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அன்றைய தினம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ம் தேதி தடை விதிக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினா காமராஜர் சாலையில் அன்று காலையில் இருந்தே போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை மட்டும் அனுமதிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.

புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல அன்றைய தினம் மெரினாவில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முன்தினம் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. நாளை (4-ம் தேதி) 3-ம் நாள் ஒத்திகை நிகிழ்ச்சி நடக்கவுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதன் பின்னர் சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து