எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சேலம் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில், துறைவாரியான பணிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், சேலம் வருவாய் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் அமையும் சேலம் (மேற்கு) பதிவு மாவட்டம் ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 20 கிராமங்கள், மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 4 கிராமங்கள் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 2 கிராமங்கள் ஆகியவற்றினை அச்சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து மொத்தம் 26 கிராமங்களை உள்ளடக்கி சேலம் (மேற்கு) பதிவு மாவட்டத்தில் புதியதாக காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 4978 ஆவணங்கள் பதிவாகி சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் 2024-2025-ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வருவாய் வட்டங்களில் அமையும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 52 கிராமங்கள் மற்றும் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 15 கிராமங்கள் ஆகியவற்றினை அச்சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து மொத்தம் 67 கிராமங்களை உள்ளடக்கி கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 8100 ஆவணங்கள் பதிவாகி சுமார் 54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .குமார் ஜயந்த்., பதிவுத்துறை தலைவர் .தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Feb 2025சென்னை: சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத
-
விரைவு ரயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே
20 Feb 2025சென்னை: விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து
20 Feb 2025அரிசோனா: அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: வரும் 4-ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
20 Feb 2025தூத்துக்குடி: அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்: துணை முதல்வர் உதயநிதிக்கு அண்ணாமலை எதிர் சவால்
20 Feb 2025சென்னை: அண்ணா சாலைக்கு தனியாக வர தயார் என்று உதயநிதி ஸ்டாலின் சவாலுக்கு அண்ணாமலை எதிர் சவால் விடுத்துள்ளார்.
-
மோசடி சம்பவங்கள் எதிரொலி: ஒரு மாதத்தில் மட்டும் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
20 Feb 2025புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்
20 Feb 2025சென்னை: தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: டெல்லி முதல்வர் ரேகா குப்தா உறுதி
20 Feb 2025புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.
-
பறிபோன ஹாட்ரிக் வாய்ப்பு
20 Feb 2025கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் நேற்று (பிப்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
20 Feb 2025மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
-
பொது இடங்களில் தலைவர்கள் சிலை: மதுரை ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
20 Feb 2025மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
-
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்கள்: அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு
20 Feb 2025சென்னை: அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்க முடியுமா? என்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஜெ.பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவுங்கள்: கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வேண்டுகோள்
20 Feb 2025சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
டெல்லி முதல்வர் மீது வழக்குகள்: தேர்தல் உரிமை அமைப்பு தகவல்
20 Feb 2025புதுடில்லி: டில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
320 ரன்களை எதிர்பார்க்கவில்லை: நியூசி. கேப்டன் ஆச்சர்யம்
20 Feb 2025கராச்சி: நாங்கள் 260 ரன்கள் அடிப்போம் என்று தான் நினைத்திருந்தோம்.
-
மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லி முதல்வர் வரை! யார் இந்த ரேகா குப்தா?
20 Feb 2025புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள்
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மலேசியா தமிழருக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
20 Feb 2025சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியா தமிழர் தூக்கு தண்டனை சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
-
ஜோ பைடன் இந்தியாவுக்கு 21 மி.டாலர் நிதியுதவி கொடுத்தது ஏன்? அதிபர் டிரம்ப் கேள்வி
20 Feb 2025மியாமி: பைடன் நிர்வாகம் எதற்காக இந்தியாவுக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலரை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு
20 Feb 2025வாஷிங்டன்: இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வங்காளதேச விமானம் நாக்பூரில் தரையிறக்கம்
20 Feb 2025நாக்பூர்: வங்காளதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
டெல்லி சபாநாயகர் பதவிக்கு விஜேந்தர் குப்தா பெயர் பரிந்துரை
20 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
-
சென்னையில் முதன் முறையாக ‘ஸ்டார் கன்டென்டர்’ டேபிள் டென்னிஸ்
20 Feb 2025சென்னை: சென்னையில் டபிள்யூ. டி.டி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் மார்ச் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
-
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்
20 Feb 2025புதுடெல்லி: அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது
20 Feb 2025இம்பால்: மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மேகாலயாவில் நிலநடுக்கம்
20 Feb 2025ஷில்லாங்: மேகாலயாவின் வடக்கு காரோ மலைகள் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.