புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கத்திரிக்காயில் ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும். அதனால் சிறு ஓட்டை கூட இல்லாமல் கவனமாக வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். வெள்ளை வரிகள் இருந்தால் காய் கசக்கும்.
பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை... குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலும் அவை நீராகவே இருக்கின்றன. அவர்களது உடலில் 75 சதவீதம் நீரே இருப்பதாக நாசாவின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதன் வளர வளர தனது நீர்ச்சத்தை இழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்த மனிதர்கள் 55 முதல் 60 சசதவீதம் வரையில் நீரை இழக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன அற்புதம் பாருங்கள் உடல் நீராலானது என்றால் ஆச்சரியம் தானே.
உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்திசெய்யும் விதமாக புது புது வசதிகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அனுப்பிய தகவலை டெலிட் செய்யும் வசதிக்கு, கூடுதல் நேரம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. தற்போது, வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய தகவலை 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு பிறகு டெலிட் செய்திட முடியாது. ஆனால், புதிய அப்டேட்டில் 2 நாள் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யும் வகையிலான வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட உரையாடலிலும், குழு உரையாடலிலும் அனுப்பிய தகவல்களை அழித்திட கூடுதல் நேரம் கிடைக்கிறது. வெளியான செய்தியின்படி, இந்த புதிய அப்டேட் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.410 இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Scarlett Ashley Cheng என்ற 6 வயது சிறுமி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றால் நம்புவதற்கு சிறிது கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அவரும், அவரது சகோதரியான 8 வயது Kaylyn என்ற சிறுமியும் இணைந்து 3 388 உதட்டு தைலங்களை சேகரித்து வைத்துள்ளனர். தற்போது இது கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. லிப்ஸ்டிக்கை போலவே லிப் பாம் என அழைக்கப்படும் உதட்டு தைலம் நவீன பேஷனில் ஒரு அங்கமாக உள்ளது. உதடுகளில் விதவிதமாக பூசிக் கொள்ளும் 100 கணக்கான பிராண்டுகள் சந்தைகளில் குவிந்து கிடக்கின்றன. தங்களது பாட்டியிடமிருந்து இது குறித்து தெரிந்து கொண்ட குழந்தைகள் படிப்படியாக இதை சேகரிக்க தொடங்கி இன்று உலக சாதனையாக மாறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்1 day 12 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்5 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
பணி நேரத்தை முறையாக கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு
23 May 2024சென்னை:ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் மூலம் வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
23 May 2024சென்னை, உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அவசர ஆலோசனை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது
23 May 2024சென்னை, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சியை தடுப்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தலமையில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2024.
23 May 2024 -
சென்னையை தொடர்ந்து சம்பவம்: கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
23 May 2024கோவை, கோவை அருகே வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
23 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலை.யின் பேராசிரியர் குழு ஆய்வு
23 May 2024தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
23 May 2024புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: மாணவிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
23 May 2024சென்னை, சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி ஷரினாகிறிஸ்டுக்
-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியது: 63,433 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பம்
23 May 2024சென்னை, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடக்கம்: ரேங்க் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியீடு
23 May 2024சென்னை, தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடங்குகிறது.
-
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
23 May 2024புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி இந்த புயல் மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாக். அரசு திட்டம்
23 May 2024இஸ்லாமாபாத், நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு உள்ளது.
-
பழைய பேருந்துகளை மாற்றாததற்கு காரணம் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
23 May 2024சென்னை:தமிழகத்தில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கப்படும் காலாவதியான மாநகரப் பேருந்துகள் மாற்றப்படாமல் இருக்க கொரோனா பொதுமுடக்கமே காரணம் என போக்குவரத்
-
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ரோடுஷோவில் பிரியங்கா குற்றச்சாட்டு
23 May 2024சண்டிகர், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மே மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்: சி.எம்.டி.ஏ. அறிவிப்பு
23 May 2024சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம்.
-
மெயின் அருவியை தவிர குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
23 May 2024தென்காசி:குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க நேற்று மாலை முதல் அனுமதி வழங்கபட்டுள்ளது.